இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
சங்கப் பாங்கும் சமயப் பங்கும் [...] 11
இவ்விரண்டு உரைகளையும், உரைவிளக்கங்களையும் கொண்டு பின்வருமாறு பட்டி மண்டப வரலாற்றுக் கருத்தின் இரண்டாவதுகல்லாகப் பின்வருமாறுஅமைப்புச் சட்டகம் அமைக்கலாம்.
இரண்டாவது கல் சட்டகம்
- மதுரையில் பட்டிமண்டபம் இருந்தது,
அஃதும் நடைமுறையில் இருந்தது.
ஒருவன் ஒரு மாறுபட்ட கருத்தைப் பட்டி மண்டபத்தில் சொல்வதுண்டு;
சொன்னவன் பட்டி மண்டபத்தில் தானே வலியப் புகுந்து சொல்வதுண்டுபோலும்,
பட்டிமண்டபத்தில் அறைகூவல் விடுக்கப்படும்;
அது ஏற்கப்படும் வரை பட்டி மண்டபத்து வாயில் கதவு அடைக்கப்படும்;
மண்டபத்தார் திறமை வாய்ந்த புலவரை அறை கூவலை ஏற்றுத் தீர்த்து வைக்குமாறு வேண்டுவர்;
மண்டபத்தாருக்காக ஒரு பெரும்புலவர் முன்வந்து கருத்துப் போரிடுவார்;
கட்டுப்படாமல் விடாப்பிடியாகப் பேசப்பட்ட
துண்டு;