* அறிவுரைக்கொத்து
45
யினும் அல்லது எத்துணைப் பெரியனவாயினும், - எல்லாம் மக்களாலாவது ஏனை உயிர்களாலாவது அன்றி அறிவில்லாப் பொருள்களாலாவது தாமாக அமைக்கப்பட்டன வல்லவே! அவையெல்லாம் முழுமுதற் கடவுளின் அறிவால் ஆக்கப் பட்டன வல்லவோ! அவ்வறிவால் ஆக்கப்பட்ட அவ்வடிவங்கள், அத்தனைக்கும் முதலான நுண்ணிய உருவங்கள் கடவுள் அறிவின்கண் அமைந்து கிடப்பன வல்லவோ?
ஒரு கண்ணாடியின் பக்கத்தேயுள்ள பொருள்களின் வடிவங்களோடொத்த வடிவங்கள் அக்கண்ணாடியின்கண் விளங்கித் தோன்றுதல் போல இறைவனது பேரறிவாகிய பெருங்கண்ணாடியின் எதிரேயுள்ள எல்லாப் பொருள்களின் வடிவங்களையும் ஒத்த அருள்வடிவங்கள் அதன்கண் விளங்கித் தோன்றுமல்லவோ? ஆதலால் மக்கள் உலகத்திலுள்ள எந்தப் பொருளைக் கடவுளாக நினைத்து வணங்கினாலும் அவ் வணக்கம் அப்பருப்பொருள் உருவத்தின்கட் செல்லாமல் அதற்கு முதலான இறைவனது அருட்பொருள் உருவத்தின்கட் செல்லு மென்பதும், அங்ஙனஞ் செல்லவே அவர்க்கு அவ்விறைவனருள் கிடைக்குமென்பதும் உறுதியாம். கடவுள் அருளின்கண் எல்லா ருவங்களும் உண்டென்பதற்கும்,
“குறித்ததொன் றாகமாட்டாக் குறைவில னாதலானும்,
நெறிப்பட நிறைந்த ஞானத் தொழிலுடை நிலைமையானும், வெறுப்பொடு விருப்புத் தன்பான் மேவுத லிலாமையானும் நிறுத்திடு நினைந்த மேனி நின்மல னருளினாலே"
என்னுஞ் சிவஞான சித்தியார்த் திருப்பாட்டே சான்றாகும்.
எந்த 6
வடிவில்
உண்டென்பதற்கு,
வழிபடுவார்க்கும்
இறைவனருள்
“விரிவிலா அறிவினார்கள் வேறொரு சமயஞ் செய்தே, எரிவினாற் சொன்னாரேனும் எம்பிராற் கேற்றதாமே”
என்னுந் அப்பர் சுவாமிகள் திருப்பாட்டே சான்றாகும்.
இனிக், கடவுளுக்கு உருவமில்லையென்றும், அவர் அருவ மாகவே இருப்பாரென்றும், அவர் குணமற்றவரென்றும், அதனால் நிர்க்குணோபாசனையே சிறந்ததென்றும், நன்றாய்