75
66
10. தமிழ்த்தாய்
கண்ணுதற் பெருங்கடவுளுங் கழகமோ டமர்ந்து பண்ணுறத் தெரிந்தாய்ந்த இப்பசுந்தமிழ் ஏனை மண்ணிடைச்சில இலக்கண வரம்பிலா மொழிபோல் எண்ணிடைப் படக்கிடந்ததா எண்ணவும் படுமோ"
திவிளையாடற்புராணம்
கலந்து,
தமிழராகிய நாம் நாடோறும் பேசிவருந் தாய்மொழி தமிழேயாகும். நாம் சிறு குழவியாய் இருந்தபோது நம் அன்னையின் தீம்பாலைப் பருகிப் பசிதீர்ந்து அவள் மடியிற்கிடக்க, அவள் நம்மைக் கொஞ்சி முத்தம் வைத்துப் பெருமை பாராட்டிப் பேசியது தமிழ் மொழியிலன்றோ? நாம் குழந்தையாய் இருந்த அந்தக் காலந்தொட்டு நாம் இந்த உலகைவிட்டு அகன்று போகும் வரைநிலைக்கும். தாய் தந்தையரோடும் உடன் பிறந்தவரோடும் மனைவி மக்களோடும் நம் நாட்டில் உள்ளவரோடும் நாம் உறவு ஒட்டி, உறவாடிப் பேசுவதும் எழுதுவதும் நமதருமை தமிழ் மொழியிலன்றோ? இங்ஙனம் நமது உயிரோடும் உடம்போடுங் நமதறிவைத் தன்வண்ணம் ஆக்கிக் கனாக் காணுங் காலத்துங் கனாவுலகில் உள்ளவரோடு நாம் பேசுகையில் அப்பேச்சோடும் உடன் நிற்பதாய்க் கிளர்ந்து விளங்குவது நமது இனிய தாய் மொழியாகிய செந்தமிழ் மொழியேயாய் இருத்தலின், நமதுயிர் இவ் வுலக வாழ்வைத் துறந்து மறுமையுலகிற் சென்று உலவும் நமக்கு உற்றதுணையாய் நம்மோடு உடன்வந்து நிற்பது தமிழ் மொழியே யாகுமென்பதும் தெளிவாகப் புலப்படுகின்ற தன்றோ? இவ்வாறு இம்மை மறுமை யிரண்டிலும் நமது உயிர்க்கு உற்றதுணையாய் இருந்து உதவுவது தமிழ்மொழி ஒன்றுமே யாகையால், நாம் கற்கும் ஆங்கிலம் ஆரியம் முதலான மொழி கள் அதுபோல் நமக்கு எப்போதும் உதவியுந் துணையுமாய் இருந்தும் பயன்பட மாட்டா.