62
4. தொல்காப்பிய முழு முதன்மை
இனி ஒரு தமிழ்நூல் அல்லதோர் செய்யுள் குமரி நாடு கடல்கொள்ளப்படுமுன் செய்யப்பட்டது எனத் துணிவு காண்டற்கு அக் குமரிநாடாக, அக் குமரிநாட்டகத்தே கிடந்த பஃறுளி அல்லது குமரியாறாக அவற்றின்கண் மொழியப் படுதல் வேண்டும் என்பது எல்லார்க்கும் ஒப்பமுடிந்தது. பலவேறு காலங்களிலிருந்தே பலவேறு புலவர்கள் பாடிய செய்யுட்களைச் சிதர்ந்து போகவிடாமல் ஒருங்குதொகுத்து அவற்றை அகம் புறமெனக் கடைச் சங்கத்தார் வகுப்ப வழக்க முற்று வருகின்றவற்றுட் புறநானூற்றிலே ஒருசில செய்யுட் களிற் கடல் கொள்ளப்படு முன்னிருந்த பஃறுளியாறு கிளந்தெடுத்துக் குறிக்கப் படுதலால், அச்செய்யுட்புலவர் காலமும் அப்புலவரோ டொருங்கிருந்து செய்யுள்கொண்ட அரசர்காலமும் குமரிநாடிருந்த காலமேயாமென்பது இனிது விளங்கும். பாண் டி யன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதியை நெட்டிமையார் என்னும் நல்லிசைப்புலவர் தாம் பாடிய “ஆவு மானியற் பார்ப்பன மாக்களும்” என்னுஞ் சய்யுளில் அவனை அவனை வாழ்த்துகின்றுழி "முந்நீர் விழவி னெடியோன், நன்னீர்ப் பஃறுளி மணலினும் பலவே பஃறுளி யாற்றைக் கிளந்தெடுத்துக் கூறக் காண்ட லால் அவர்காலம் பஃறுளியாறு கடல்கொள்ளப்படு முன்னதாதல் இனிது துணியப்படும். இனித் தொல்காப்பியத்திற்குப் பாயிரஞ் செய்த ஆசிரியர் பனம்பாரனார் “வடவேங்கடந் தென்குமரி யாயிடை” எனக் குமரியாற்றைக் கிளந்தெடுத்துக் கூறுதலானும் அது குமரியாறு கடல் கொள்ளப்படுமுன் பெழுந்த தொன்றாம். இங்ஙனங் குமரியாறு தெற்கு எல்லையாக வைத்துரைக்கப் பட்டதன்கண் ஐயுறவுகொண்டு, நண்பர் சவரிராய ரவர்கள் குமரி நாட்டிற்கு நடுவிற்சிறந்து விளங்கிய
6
வி