இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
உரைமணிக்கோவை
123
நடைபெறும்படி மெய்யுணர்வினரான நந்தொல்லாசிரி யர்கள் ஏற்பாடு செய்திருந்தும், அச்சிறந்த அச்சிறந்த ஏற்பாடு பின்னாளிற் சிதைந்து போயிருப்பதைக் காணுங்கால் அறிவுடையார் நெஞ்சம் நீராய் உருகுகின்றதே! .இவ்விரங்கத் தக்க நிலையைக் கண்டே, யாம் முன்னையோர் கொண்ட முறைப்படி பின்னையோருஞ் செய்து நலம் பெறுதற்காக அம்பலவாணர் திருக்கோயிலுடன் மணி மணிமொழி நூல் நிலையமுஞ் சேர்த்துப் பொதுநிலைக் கழக நிலையத்தில்
அமைத்திருக்கின்றேம்.