இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
திருவொற்றிமுருகர் மும்மணிக்கோவை
ஏழுல கழியினும் அழியாது
ஊழி யூழியும் வாழ்மதி சிறந்தே!
29. காப்புக் கைம்மிக்குக் காமம் பெருகியுரைத்தல்
சிறந்த பொருளொற்றிச் சேவ்வேள் இவரை
மறந்திங் குயிர்வாழ மாட்டோம் – பறந்தோடித்
திண்டோள் தழுவுவம் இன்றேற் செழுவரையைக் கண்டேறிக் கீழ்விழுவங் காண்.
30. அடியுறையிடுதல்
காணப் பெறாததொர் காட்சியை யேனுங் கசிந்த அன்பாற் பேணப் பெறுமுக் கருவியிற் காண்பர் பிறங்கு மொற்றி வாணப் பெருந்தகை யென்பது கொண்டு வழங்குமன்பாற் பூணப் பெறுமிந்த மும்மணிக் கோவையுன் பூங்கழற்கே.
திருவொற்றிமுருகர்
மும்மணிக்கோவை முற்றும்
59
(28)
(29)
(30)