* மாணிக்கவாசகர் வரலாறும் காலமும்
―
18
31
எடுத்தெடுத்து விளம்பி, அம் மக்களுள்ளத்தைக் கரைத்துத் தூய்மை செய்தற்கண் மாணிக்கவாசகர் திருவாசகத்துக்கு ஈடாவதொரு நூல் எம்மொழியினுமே இல்லை இதற்கு,
“நடித்து மண்ணிடைப் பொய்யினைப் பலசெய்து
நான்எனது எனும்மாயக்
கடித்த வாயிலே நின்றுமுன் வினைமிகக்
கழறியே திரிவேனைப்
பிடித்து முன்நின்றுஅப் பெருமறை தேடிய
அரும்பொருள் அடியேனை
அடித்துஅடித்துஅக் காரம்முன் தீற்றிய அற்புதம் அறியேனே”
என்னும் ம் ஆரமிர்தன்ன பின்னும் ஒரு சான்றாம்.
அடிகளின்
திருப்பாட்டே
மேலும், அடிகள் இறைவனை முன்னிலைப்படுத்து அழுதுரைக்கும் பாக்களைப் போல்வன, ஏனை ஆசிரியன் மார் தேவாரத்திருப்பதிகங்களில் மிகுதியாயில்லை. அவர் அருளிச்செய்த திருப்பதிகங்களெல்லாம் பெரும்பாலுஞ் சிவபிரானைப் படர்க்கையிடத்துவைத்தே பரவுகின்றன. தன் தலைவன் முன்நின்று அவனை முன்னிலைப்படுத்து ஓர் அடியவன் தனக்குள்ள குற்றங் குறைகளை எடுத்து மொழிந்து அவனது அருளை வேண்டுங்கால், அவன் நெஞ்சம் நெகிழ்ந் துருகுமாறுபோல், தன் தலைவனைக் காணாவிடத்தே யிருந்து அவன் எத்துணைதான் தன் சிறுமையினையுந் தன் றலைவன்றன் அருட்பெருமையினையும் நினைந்து பார்ப்பினும் உரைப்பினும் அவன் நெஞ்சம் அத்துணை மிகுதியாய் உருகாது. இவ் வியற்கை மன நிகழ்ச்சிக்கு இசையவே, இறைவனை முன்னிலைப்படுத்துப் பாடிய அடிகளின் திருவாசகமுங் கன்னெஞ்சினையும் உருக்குந்திறம் பெறலாயிற்றென்றும். அவனைப் படர்க்கை யிடத்து வைத்துப் பாடிய ஏனையாசிரியன்மார் மூவரின் திருப்பதிகங்கள் அத்துணை யுருக்கம் பெரும்பாலும் வாயா வாயினவென்றும் அறிந்துகொள்ளல் வேண்டும். அதுவல் லாமலும், இறைவனைக் கண்ணாரக் கண்டு அவனுக்கு ஆளான காலந்தொட்டு, மாணிக்கவாசகர் தமக்கு எளியனாய்
|