202
மறைமலையம் - 26
“எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்ப தறிவு”
ய
என்று அருளிச் செய்வாராயினர்? இவ்வாறு உண்மையைக் கண்டெழுதுதலிற் கடைப்பிடியாய் நில்லாது, "இவர் தெய்வத்தன்மை வாய்ந்த ஆசிரியர்; இவரியற்றிய இந் நூலிற் குற்றங் குறையாவது ஏதும் இராது” என்று குருட்டுப் பிடியில் உறைத்துநின்று, தாமும் அவர் நூற்பொருளை யாராயாது, ஆராய்வார் சிலர் தம்மையுங் கண்டவாறு புறம் பழித்துப் பேசி உலகினை அறியாமையில் அழுத்துவாரும் உளர்; அத்தன்மையினாருரைகளை ஒருபொருட்டாக வையாது, மெய்மையாராய்ச்சியிற் செல்லுதலே உலகினைத் தேற்றுஞ் சான்றோர் கடனாமென்க.
மாணிக்கவாசகப்
பருமான் இருந்த
காலம்
இற்றைக்கு ஆயிரத்து எழுநூறு ஆண்டுகட்குமுன், அஃதாவது கி.பி.மூன்றாம் நூற்றாண்டின் முற்பகுதிக்குட் படுவதா மென்பதனை, இருபத்தேழு ஆண்டுகட்குமுன் வளிவந்த ஞானசாகர முதற் முதற் பதுமத்தின்கண் வெளி யான மாணிக்கவாசகர்கால நிருணயம் என்னுங் கட்டுரையில் நன்கு விளக்கினேம். அக்கட்டுரையும் இந் நூலின் இறுதியிற் சேர்க்கப்பட்டிருக்கின்றது.
பொதுவாகத்
அதன்பின் இருபஃதாண்டுகளாய்ப் தமிழ்நூற் கால அளவைகளைப் பற்றியுஞ் சிறப்பாக மாணிக்கவாசகரிருந்த காலவரையைப் பற்றியும் அறிஞர் பலரால் எழுதி வெளியிடப்பட்ட கட்டுரைகளையும் நூ நூல் களையுஞ் செவ்வனே ஆராய்ந்துபார்த்து, அவற்றுட் பொருந்துவனவும் பொருந்தாதனவும் வேறுபிரித்துக் காட்டிப், பண்டைத் தமிழ்ப்பெரும் பனுவலாகிய தொல்காப்பியம் முதற் பின்றைத் தமிழ்க் பேரறிவு நூலாகிய சிவஞான போதம் ஈறாக வந்த தென்னூல் வடநூல்களின் காலங்களையெல்லாம் வரையறை செய்து நிறுவி, அம் முகத்தால் மாணிக்கவாசகப் பெருமான் காலம் திருநாவுக்கரையர், திருஞானசம்பந்தர், சுந்தரமூர்த்திகள் முதலான சைவசமயாசிரியர் ஏனை மூவர் காலத்திற்கும்