124
66
மறைமலையம் – 27
"ஆத்மாநம் அரணிம் க்ருத்வா ப்ரணவஞ் சோத்தராரணிம் ஜ்ஞாநநிர்மத நாப்யா ஸாத் பாசந்தஹதி பண்டித
என்னுங் கைவல்லியோபநிடதத் திருமொழியும் ஸ்வதேஹமரணிம் க்ருத்வா ப்ரணவஞ் சோத்ராரணிம் த்யாநநிர்மத நாப்யா ஸாத் தேவம் பச்யேந் நிகூடவத் திலேஷூ தைலம் ததிநீவ ஸர்பிராபஸ் ஸ்ரோதஸ் ஸ்வரணீஷூ
66
'சாக்நி: ஏவ மாத்மாத்ம நிஜாயதே ஸௌஸத்யே நைநம் தபஸா யோது பச்யதி ஸர்வவியாபிந மாத்மாநம் க்ஷரே ஸர்பி
ரிவார்பிதம்” திருமொழியும்
என்னுஞ் னுஞ் சுவேதாசுவதரோபநிடதத் திரு எழுந்தன.
ங்ஙனங் காணவுங் கருதவும் வாராத முழுமுதற் பெருங்கடவுளைக் காணவுங் கருதவும் எளிதாகிய உருவத் திருமேனியிற்கொண்டு வழிபடுந் திருவுருவ வழிபாட்டின் இயல்பு அறியமாட்டாத வேறு சமயத்தார் சிலர், இந்துக்கள் இழிந்ததாகிய விக்கிரகாராதனை செய்து இறைவனுடை
வ
பருஞ்சினத்துக்கு ஆளாகின்றனர் என்று இழித்துச் சொல்லா நிற்பர். ரோம், கிரீசு, எகிப்து முதலிய நாடுகளி லுள்ளவர்கள் செய்யும் விக்கிரகாராதனை போல்வதன்றி ந்நாவலந்தீவின் கண் உள்ள நன்மக்கள் செய்து போதரும் திருவுருவ வழிபாடு, ஆழ்ந்த கருத்துடையதாய் முதல்வன் ஓரோர் அன்பர் பொருட்டு ஓரொரு காலங்களில் மேற்கொண்டு வந்த அருட்டிருவுருவ வழிபாடாகலின், அது மெய்யன்புடையார் மெய்ம்மையான் வழிபடுதற்கு மேம்பாடுடைத்தாம். பிற நாடுகளிலுள்ள மக்கள் இறைவன் அங்ஙனம் திருமேனி கொண்டு அருள்செய்யுந் திருக்கோலங் களை ஒரு காலத்துங் கண்டறியாமையின் அவர் தாந்தாம் அறிந்தவாறே ஒவ்வொரு சித்திரப்பாவைகளை அமைத்துக் கொண்டும். பூனை, பாம்பு, சுண்டெலி, முதலை முதலிய உயிர்களின் வடிவங்களை நிறுத்திக் கொண்டும் வழிபட்டு அவ் அறிவில் உருவப் பொருள்களின்கண் அன்புடையராய் றைவனை யறிந்து வழிபடுதற்குரிய நல்வினையாளராய் வாழுவாராயினர்.