உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:முல்லைப்பாட்டு ஆராய்ச்சியுரை.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கூகா முல்லைப்பாட்டு ஆராய்ச்சியுரை யை ஆசிரியர் சிவஞானயோகிகள் தாம் இயற்றிய தொல் காப்பியச் சூத்திரவிருத்தியில் ஆங்காங்கு மறுத்தரு ளியவாறுங் காண்க. அகன்று கிடக்குஞ் செய்யுட்பொரு ளை அணுகவைத்துப் பொருத்திச்சொல்வதே தொல்காப் பியனார் கூறிய மாட்டு என்னும் உறுப்பாவதன்றிச் செய் யுள் ஒருபக்கமும் உரை ஒருபக்கமுமாக வைத்து உரைப் பது அஃது அன்றாம் என்பது கடைப்பிடிக்க. அன்றன்று, நச்சினார்க்கினியர் உரைக்கும் உரைப்பொருள் சிறந்ததாக லின், அவர் அவ்வாறு செய்யுட்களை அலைத்துப் பொருள் கூறுதல் குற்றமாகா தெனின்; நன்று சொன்னாய், அவர் நாவ்வளவுதான் சிறந்த உரை உரைப்பினும் அது செய் யுட்பொருளைக் கௌவிக்கொண்டு செல்லாமல் வேறுபடு மாயின், அது கொள்ளற்பாலதன்று என மறுக்க. செய்யு ளுக்கு இசைய உரை யெழுதுதல் வேண்டுமே யன்றி, உரைக்கு ஏற்பச் செய்யுளை அலைத்து மாற்றல் வேண்டு மென்றல் ""முடிக்குத்தக்க தலை செய்துகொள்வேம்" என் பார் சொற்போல் நகையாடுதற்கே ஏதுவாமென்றொழிக. அற்றன்று, செய்யுளியற்றிய புலவரே ஓர் ஒழுங்குமின்றி அவ்வாறு சொற்களையும் பொருள்களையுஞ் சிதறவைத் துப் பாடினாராகலின் அக்கருத்தறிந்து நச்சினார்க்கினியர் அங்ஙனம் பொருளுரைத்துக் கொண்டார் என்னாமோ வெனின்; அறியாது கடாயினாய், உலகவியற்கையும் மக்க ளியற்கையும் அறிந்து, வரிசை வரிசையாக அரும்பொ ருள் விளங்கித் தோன்றப் பாடும் நல்லிசைப் புலவர் அவ் வாறு ஓரொழுங்குமின்றிப் பாடினாரென்றல் உலகில் எங் குங் காணப்படாமையானும், அது நல்லிசைப்புலமை ஆகாமையானும் அங்ஙனஞ் சொல்லுதல் பெரியதோர் இழுக்காய் முடியும் என்றுணர்க.