62
இசைத்தமிழ்க் கலம்பகம்
2
ஆடும் அழகார் மயிலே
அற்றை நாடகத் தமிழே
கூடும் பரதம் என்றே
குலவும் இன்றென அகவாய்
3
பவழக் கூர்வாய்க் கிளியே
பண்டை முத்தமிழ் நூல்கள்
எவணி றந்தன எனவே
இனிய குரலிற் கிளவாய்.
71. தமிழை மறைப்பதால் முந்நூல் கெடுதல் கைத்தலம் நிறைகனி' என்ற மெட்டு
1
தமிழை மறைப்பதாலே தாங்கெடுமே முந்நூலே தாழாமலே யிக்காலே தடுமாலே
இமிழ்நீர் வரைப்பின்மேலே இல்லை வேறிது போலே எய்தா தடிமைப் பாலே எடு வேலே.
2
வரலாறு மாந்தனூலும் வளர்கின்ற மொழிநூலும் வழி தெரியாமல் மேலை நாட்டாரும்
திரிவாகும் ஆரியத்தைத் தென்னூலின் முன்னூலாகத் திண்டாடி மெய்யறிய மாட்டாரே.
3
உண்மையை மாற்ற என்றும் ஒருவராலு மாகாதே ஒல்லும் இறையு மாற்றின் இறையாகான் ஒண்மையொடு நன்மையும் ஓங்கும் குடியரசே உண்மை கடைப்பிடித்தல் முறையாகும்.
4
தமிழே உலகமுற்றும் தழுவிய மொழியாகும் தகுதியாய் இதையொத்துக் கொள்வீரே
திமித குமுதமென்று திமிலர்போல் விண்ணிற் சென்று திங்களை யுற்றவர்க்குச் சொல்வீரே.
(அறுசீர்க் கழிநெடில் ஆசிரிய மண்டிலம்)