உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 36.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

62

இசைத்தமிழ்க் கலம்பகம்

2

ஆடும் அழகார் மயிலே

அற்றை நாடகத் தமிழே

கூடும் பரதம் என்றே

குலவும் இன்றென அகவாய்

3

பவழக் கூர்வாய்க் கிளியே

பண்டை முத்தமிழ் நூல்கள்

எவணி றந்தன எனவே

இனிய குரலிற் கிளவாய்.

71. தமிழை மறைப்பதால் முந்நூல் கெடுதல் கைத்தலம் நிறைகனி' என்ற மெட்டு

1

தமிழை மறைப்பதாலே தாங்கெடுமே முந்நூலே தாழாமலே யிக்காலே தடுமாலே

இமிழ்நீர் வரைப்பின்மேலே இல்லை வேறிது போலே எய்தா தடிமைப் பாலே எடு வேலே.

2

வரலாறு மாந்தனூலும் வளர்கின்ற மொழிநூலும் வழி தெரியாமல் மேலை நாட்டாரும்

திரிவாகும் ஆரியத்தைத் தென்னூலின் முன்னூலாகத் திண்டாடி மெய்யறிய மாட்டாரே.

3

உண்மையை மாற்ற என்றும் ஒருவராலு மாகாதே ஒல்லும் இறையு மாற்றின் இறையாகான் ஒண்மையொடு நன்மையும் ஓங்கும் குடியரசே உண்மை கடைப்பிடித்தல் முறையாகும்.

4

தமிழே உலகமுற்றும் தழுவிய மொழியாகும் தகுதியாய் இதையொத்துக் கொள்வீரே

திமித குமுதமென்று திமிலர்போல் விண்ணிற் சென்று திங்களை யுற்றவர்க்குச் சொல்வீரே.

(அறுசீர்க் கழிநெடில் ஆசிரிய மண்டிலம்)