இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
ஞா. தேவநேயப் பாவாணர்
தாயையுங் கொல்லவே தயங்கார் சிலர் - தாய்மொழி யைக்கொல்லத் தாராளமே
அவர்
கொள்வர்
65
பாராளவே - கொடுங் காராளரே (வழங்)
6
தமிழறியார் தமிழ் அதிகாரிகள் – எனத் தான்றோன்றித் தனமானத் தருக்கி யின்றே - மிகச்
7
செருக்கி நின்றார் - உரை பெருக்குகின்றார் (வழங்)
தமிழொன்றே உலகத்தில் தனிமொழியாம் அதன் தனிச்சொல்லை வீழ்த்த வந்தன வடசொல் - அங்ஙன்
வீழ்ந்த சொல்லை - நாமே மீண்டும் கொள்வோம் (வழங்)
74. அயன்மொழி யெழுத்தை யகற்றல்
(இசைந்த மெட்டிற் பாடுக.)
1
அயன்மொழிச் சொற்களைப் போன்றே
அயன்மொழி யெழுத்தும் வேண்டா
இயலறி தமிழச் சான்றோர்
இயல்தமி ழெழுத்தே ஆண்டார்.
2
ஒற்றரே வருவது முன்னே
உறுபடை வருவது பின்னே மற்றொரு மொழியெழுத் தின்னே மருவிடின் சொலும்வரும் மன்னே.
3
வடசொல் தமிழெழுத் தாலே
வழங்குக வென்றது நூலே
குடசொல் ஒன்றிலை மேலே
குறித்ததொல் காப்பியக் காலே.