உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 36.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஞா. தேவநேயப் பாவாணர்

தாயையுங் கொல்லவே தயங்கார் சிலர் - தாய்மொழி யைக்கொல்லத் தாராளமே

அவர்

கொள்வர்

65

பாராளவே - கொடுங் காராளரே (வழங்)

6

தமிழறியார் தமிழ் அதிகாரிகள் – எனத் தான்றோன்றித் தனமானத் தருக்கி யின்றே - மிகச்

7

செருக்கி நின்றார் - உரை பெருக்குகின்றார் (வழங்)

தமிழொன்றே உலகத்தில் தனிமொழியாம் அதன் தனிச்சொல்லை வீழ்த்த வந்தன வடசொல் - அங்ஙன்

வீழ்ந்த சொல்லை - நாமே மீண்டும் கொள்வோம் (வழங்)

74. அயன்மொழி யெழுத்தை யகற்றல்

(இசைந்த மெட்டிற் பாடுக.)

1

அயன்மொழிச் சொற்களைப் போன்றே

அயன்மொழி யெழுத்தும் வேண்டா

இயலறி தமிழச் சான்றோர்

இயல்தமி ழெழுத்தே ஆண்டார்.

2

ஒற்றரே வருவது முன்னே

உறுபடை வருவது பின்னே மற்றொரு மொழியெழுத் தின்னே மருவிடின் சொலும்வரும் மன்னே.

3

வடசொல் தமிழெழுத் தாலே

வழங்குக வென்றது நூலே

குடசொல் ஒன்றிலை மேலே

குறித்ததொல் காப்பியக் காலே.