ஞா. தேவநேயப் பாவாணர்
அ.
இருநூ றாண்டுமுன் இங்குவந் தெம்மையே
அறிவூட்டி முன்னேற்றிய பின்
ஒரு போரின்றியே ஆங்கில ராட்சியின்
நமை மீட்டமொழி ஆங்கிலம்
அறிவியன் மொழியாம் பொதுவியன் மொழியாம்
உலகியன் மொழியாம் இன்றிந்தியன் மொழியும் அதுவாகும்
(இங்கே)
104. எது தலைசிறந்த இந்தியப் பொதுமொழி?
'நல்ல பெண்மணி' என்ற மெட்டு
சிறந்த பொதுமொழி தலை
ப.
சிறந்த பொதுமொழி.
து. ப.
நாம் சேர்ந்து தாழ்வு தீர்ந்து வாழச்
செய்த தெம்மொழி அதுவே
(சிறந்த)
திறந்த வெளிபோல் பலதுண்டாகக் கிடந்த இத்தேயம் – தம் திறமையால் ஆங்கிலர் இணைத்த புதுவிறல் தாயம்
கறந்த மேனியாகக் கல்வி காந்தியின் வாயும் - மிகக்
கலந்து நல்ல விடுதலை பின் கண்டதெம் மொழி அதுவே (சிறந்த)
105. தமிழ்நிலை கண்டு தமிழன் வருந்தல்
'செந்தில்மா நகரந்தனில் மேவிய' என்ற மெட்டு
நாவ லம்பொழில் தீவெனுந் தென்கண்டம்
நண்ணிய ஆப்பிரிக் காவே - உண்டு
பண்ணிய மாநிலத் தாவே
கங்கை கூடிய பனிம லைகடல்
தங்கி நீடிய தெறிய லையுடன்
அன்று
அந்த நாளிலே தென்புல மாமலை
93