ஞா. தேவநேயப் பாவாணர்
சொல்லி முன்னை யடிமைத்தனம்
சுமந்துவர முன்போ லின்று
2
சோறெனுஞ்சொல் அழகான தூயதமி ழாயிருக்க
( தமிழன்)
மாறியதைச் சாதமென்று மானமின்றி வழங்கி நிற்கும் (தமிழன்)
3
சேயசிவன் திருமாலே செந்தமிழ வழியேனும்
கோயில் வழிபாடு முற்றும்கூற வடமொழி காணும்
4
நாட்டுமொழி இந்தியினி வீட்டுமொழி தமிழெனவே
(தமிழன்)
கேட்டுவழி நின்றுமதி கெட்டுரைத்தான் தமிழனுமே ( தமிழன்)
5
தூயமரக் கறியுணவே துய்க்குமுயர் தமிழன்அன்னே
தீயனெனச் சமையற்பணித் திறமொருசார் இழந்ததென்னே
6
பிள்ளையாரைப் பிடித்ததுன்பம் பின்னரசைப் பிடித்ததைப்போல் வெள்ளைமனத் தமிழன்நிலை விழுத்தமிழைப் பிடித்ததப்பால்
111
(தமிழன்)
(தமிழன்)
7
சீர்த்ததிருச் செந்தமிழில் சிவனுமிட்டான் கையெழுத்தே சாத்துகின்றார் சங்கிருதம் தம்பிரான்மார் தலையெழுத்தே
( தமிழன்)
127. தனித்தமிழ்ப் புலவர்க்குத் தாங்கலின்மை 'பொருளே யில்லார்க்குத் தொல்லையா' என்ற மெட்டு
ப.
தமிழ்நா டெனவொன் றில்லையா
தமிழர் இல்லையா – தனித்
—
அதில்
தமிழைப்பேணும் புலவர்க்கேஒரு தாங்கல் இல்லையா.