உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 36.pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

112

இசைத்தமிழ்க் கலம்பகம்

உ.1

குமரிநாட்டில் தமிழொன்றே முன்குலவ வில்லையா

இன்றும் நிலவ வில்லையா

தமிழ்நாடென்னும் பேரைச் சொல்லவும்

தாங்காத் தொல்லையா

இந்தத்

தமிழன் எந்நாள் அடைவானோ விடுதலைதான் சொல்லையா

2

சிவனும் மாலும் தமிழர் தெய்வம் தெரிய வில்லையா

ஆய்வும்

புரிய வில்லையா

செயற்கை மொழியில் வழிபடுவதைத்

தீர்த்தல் தொல்லையா

இந்தச் சிறுமைத் தமிழன் மயலும் எந்நாள் தெளியும் சொல்லையா (தமிழ்)

3

இந்தியாலே என்ன நன்மை எண்ண வில்லையா

மனத்

திண்மை யில்லையா

இலக்கியநலம் இல்லாமொழியை விலக்கல் தொல்லையா இந்த எளிமைத் தமிழன் வலிமை

எந்நாள் எய்தும் சொல்லையா

4

தேயவொற்றுமை ஆங்கிலத்தால் திகழ வில்லையா

நாமும் புகழ வில்லையா

தேவநாகரி வேண்டாவென்று தெரித்தல் தொல்லையா

இந்தத்

- தீங்கெல்லாம் இந்நாட்டில் எந்நாள்

நீங்கும் சொல்லையா

128. தமிழன் பேதைமை

'கண்டதுண்டோ கலியுகத்தில்' என்ற மெட்டு

ப-

ஏதமேகொண் டூதியத்தை இழப்பதே யன்னோ – பெரும் பேதைமையென் றேபுலவர் பெருமகன் சொன்னான்.

(தமிழ்)

(தமிழ்)

(தமிழ்)