ஞா. தேவநேயப் பாவாணர்
உ.1
முன்னாளில் தான்கல்வி முறையின்றிக் கண்கள் மூடியிருந் தேதும் முன்னேற்றமே யில்லை
இந்நாளிலே எத்துணையோ கற்றும்
ஏனையவுயர் நாடுகண்டும் ஏன் தொல்லை
(தன்)
2
தொழில் எதுவேனும் துப்புர விருந்தால்
தோழமை கொண்டன்பாய் மேலையரின் றுண்பார்
எழில் வெண்ணிறம் ஏத்துங்குல வேலை
இருந்துந் தமிழரைப் பிறர்இழி வென்பார்
(தன்)
3
மூவேளை முழுகிப் பூவாடை புனைந்து
முடையூனை விண்டு முகமணம் பூசித்
தூவாழ்வையே தொடர்ந்து மேற்கொண்டுந் துப்புரவில்லை தமிழன் என்பார் ஏசி
(தன்)
132. பிராமணர் நிலத்தேவரன்மை
'சங்கம் முழங்குந் தமிழ்' என்ற மெட்டு
ப.
இன்னுந் தமிழனுக்கே இந்திய ஆரியரை
இந்நிலத் தேவரென்றே எண்ணும் மயக்க முண்டோ
து. ப.
மன்னும் அறிவியலால் உண்மை விளங்கியிரு
கண்ணுந் திறந்துகொண்ட பின்னும் பேதைமையென்னே.
115
(இன்னும்)
2.1
வெண்மை நிறத்தவரை விண்ணவரென்று கொள்ளின் வெற்றி பெறுவார் அமெரிக்கர் ஐரோப்பியரே
வன்மை யொலிகள் தெய்வத்தன்மை யுறுவவெனின்
வண்ணான் கழுதைபெற வொண்ணும் வழிபாடரோ (இன்னும்)