ஞா. தேவநேயப் பாவாணர்
2
திருவைக் காக்கத் திருடர் துணையோ
தெவ்வரைத் தன்னொடு சேர்த்தல் வினையோ குரவர் சொல்லெலாம் கொள்படிப் பினையோ குறிப்பது செய்யக் கொடுவினை தனையோ.
3
வடமொழி யிந்தி மனங்கொள் தகையர்
வண்டமிழ்க் கென்றும் வன்பெரும் பகையர்
இடமுற இரண்டும் ஏற்றிடும் வகையர் எலியோடு பூனை ஏந்திய நகையர்.
4
பகையாம் இருவர் பாங்கினும் ஒருவர்
பண்பாய் நட்பென யாங்கனம் வருவர்
வகையாய் வாழ வழியவர் தெரிவர்
வாய்மையில் ஐயுற வேயிடந் தருவர்.
5
தன்னலத் தாரைத் தழுவல் தீது
தாயையுங் கொல்வர் தாம்தயங் காது
மன்னலம் மானம் மதியவர்க் கேது
மதிக்கும் பதவி வந்துறும் போது.
223. தமிழொன்றே தருக்கத்திற்கிடமான
பாடமாதல்
பண் காப்பி
1
187
தாளம்
முன்னை
தமிழகக் கல்விப் பாடப்பொருள்கள் தவப்பல விருந்தாலும் தமிழொன்றேதான் அடிமுதல் முடியும் தருக்கத்திற்கிடமாம் இமிழ்கடலுலகில் இந்நிலைமைவே றெந்நாட்டிற் சாலும் இலகும் உண்மை மறையின் அடிமைக் கேதுவாம் மடமாம்.