உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 36.pdf/216

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

186

இசைத்தமிழ்க் கலம்பகம்

2

நெடுங்கணக்கு முதலாக

நேரான வொலிகளுடன்

கொடுந்தமிழுங் கலவாமல் செல்லமுத்து பயில்

குமரிநிலத் திருந்தபடி செல்லமுத்து.

உரைநடையில் மறைமலையார்

உயர்கா.சு. வுடன்மகிழ்நன்

3

வரைநூல்கள் வாங்கிப்படி செல்லமுத்து – அவை வழக்கில்வரப் பழக்கம்பண்ணு செல்லமுத்து.

4

செய்யுளிலே மேற்கணக்கும்

சிலம்புதிருக் கோவையுடன்

பொய்யாத குறளும்படி செல்லமுத்து - அறம் பொருந்தியநா லடியும்படி செல்லமுத்து.

இலக்கணத்திற் காரிகையும்

5

இலங்கியதொல் காப்பியமும்

விளக்கமாகப் பயின்றுதெளி செல்லமுத்து - மிக விலக்கிவட கூறுகளைச் செல்லமுத்து.

222. தமிழ்ப் புலவரை இருவகையராய்ப் பிரித்தறிக!

(இசைந்த மெட்டிற் பாடுக)

1

மறைமலை யடிகள் வழியர் வேறு

வையா புரியார் வழியர் வேறு

பிறைநிலைத் தமிழே பெரிதாமாறு

பேணும் புலவரைப் பிரித்திவ் வாறு.