இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
186
இசைத்தமிழ்க் கலம்பகம்
2
நெடுங்கணக்கு முதலாக
நேரான வொலிகளுடன்
கொடுந்தமிழுங் கலவாமல் செல்லமுத்து பயில்
குமரிநிலத் திருந்தபடி செல்லமுத்து.
உரைநடையில் மறைமலையார்
உயர்கா.சு. வுடன்மகிழ்நன்
3
வரைநூல்கள் வாங்கிப்படி செல்லமுத்து – அவை வழக்கில்வரப் பழக்கம்பண்ணு செல்லமுத்து.
4
செய்யுளிலே மேற்கணக்கும்
சிலம்புதிருக் கோவையுடன்
பொய்யாத குறளும்படி செல்லமுத்து - அறம் பொருந்தியநா லடியும்படி செல்லமுத்து.
இலக்கணத்திற் காரிகையும்
5
இலங்கியதொல் காப்பியமும்
விளக்கமாகப் பயின்றுதெளி செல்லமுத்து - மிக விலக்கிவட கூறுகளைச் செல்லமுத்து.
222. தமிழ்ப் புலவரை இருவகையராய்ப் பிரித்தறிக!
(இசைந்த மெட்டிற் பாடுக)
1
மறைமலை யடிகள் வழியர் வேறு
வையா புரியார் வழியர் வேறு
பிறைநிலைத் தமிழே பெரிதாமாறு
பேணும் புலவரைப் பிரித்திவ் வாறு.