உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 36.pdf/217

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஞா. தேவநேயப் பாவாணர்

2

திருவைக் காக்கத் திருடர் துணையோ

தெவ்வரைத் தன்னொடு சேர்த்தல் வினையோ குரவர் சொல்லெலாம் கொள்படிப் பினையோ குறிப்பது செய்யக் கொடுவினை தனையோ.

3

வடமொழி யிந்தி மனங்கொள் தகையர்

வண்டமிழ்க் கென்றும் வன்பெரும் பகையர்

இடமுற இரண்டும் ஏற்றிடும் வகையர் எலியோடு பூனை ஏந்திய நகையர்.

4

பகையாம் இருவர் பாங்கினும் ஒருவர்

பண்பாய் நட்பென யாங்கனம் வருவர்

வகையாய் வாழ வழியவர் தெரிவர்

வாய்மையில் ஐயுற வேயிடந் தருவர்.

5

தன்னலத் தாரைத் தழுவல் தீது

தாயையுங் கொல்வர் தாம்தயங் காது

மன்னலம் மானம் மதியவர்க் கேது

மதிக்கும் பதவி வந்துறும் போது.

223. தமிழொன்றே தருக்கத்திற்கிடமான

பாடமாதல்

பண் காப்பி

1

187

தாளம்

முன்னை

தமிழகக் கல்விப் பாடப்பொருள்கள் தவப்பல விருந்தாலும் தமிழொன்றேதான் அடிமுதல் முடியும் தருக்கத்திற்கிடமாம் இமிழ்கடலுலகில் இந்நிலைமைவே றெந்நாட்டிற் சாலும் இலகும் உண்மை மறையின் அடிமைக் கேதுவாம் மடமாம்.