ஞா. தேவநேயப் பாவாணர்
264. சேலம் குகைத் திருக்குறட் கழகம்
221
பண் சிந்துபைரவி
ப.
குகைத் திருக்குறட் கழகம் ஒன்றே குமுறும் வள்ளுவன் தமிழை நன்றே.
து .ப.
தகைத் தமிழகம் முழுதும் இன்றே
தகுபுலவரைத் தழுவி நின்றே.
தாளம்
—
(குகைத்)
முன்னை
திகைத்தவர் உளந்தெளிக என்றே திருவள்ளுவனைத் தெரிந்து முன்றே பகைத்தவரையும் பரிவில் வென்றே பரமன் அருளும் பெறவே பின்றே
(குகைத்)
265. செங்காட்டுப்பட்டி முத்தமிழ்க் கழக வண்மை
‘சாமி நீ துணை செய்குவாய்' என்ற மெட்டு
பண்
―
சீராகம்
ப.
செங்கை முத்தமிழ்க் கழகம் - முது
செழியன் தமிழ் பழகும்
து .ப.
செங்கைப் பொதுவர் முதல் சிறந்த அறுபதின்மர் சிதலை தினும்ஆல் மதலை புரையும்
தாளம் - முன்னை
கங்கை பனிமலை கொண்ட வேந்தரும் கடந்து போயினார் எங்கே செல்லினும் ஈகை மன்னரும் இலரே ஆயனார்* பொங்கல்தொறும் ஓர்ஏழைப் புலவன் மகிழ்வு பொங்கச் செங்கை நிறைய வெண்பொன் வழங்கும்
ஆயனார் ஆய் அன்னார். ஆய் - கடைவள்ளல்.
(செங்)
(செங்)
(செங்)