இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
ஞா. தேவநேயப் பாவாணர்
281. உழவன் உயர்வு
'சயசயகோ குலபால' என்ற மெட்டு
பண்
-
பைரவி
ப.
உழவன் எங்கும் உயர்ந்தோனே
உலகருத்தும் உணவோனே
தளராதே உழைப்போனே
தனியுரிமை உடையோனே.
•.1
233
தாளம் - ஈரொற்று
விருந்தோம்பும் வேளாண்மை வியனுலகில் மரபாகும் மருந்தாகி நடுவூருள் மருவும்நல்ல மரமாகும்
2
(உழவன்)
ஐம்புலத்தும் இல்வாழ்வார் அனைவருக்கும் அளித்துதவி ஐந்நிலத்தும் பொருள்மாற்றே ஆற்றும் கூட்டுறவாளி (உழவன்)
3
அந்தணரின் அருந்துறவும் அரசினரின் ஆள்வினையும் வந்தபொருள் வாணிகமும் வளர்அறிவும் தான்வனையும் (உழவன்)
282. மக்கள்தொகை மிகையால் தொல்லை
பண் காப்பி
தாளம் - முன்னை
ப.
இனிநல்ல காலமே இல்லை - மக்கள் இனப்பெருக் கால்மிக எய்துவர் தொல்லை
9.1
கனிதருஞ் சோலையும் கழனியும் ஒல்லை கரந்து நகர்விரிவு காணுவ இல்லை இனிதெனப் பாலையுந் திருந்திய எல்லை
இடம்பல வுணவுகள் விளைவதற் கில்லை
(இனி)