உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 36.pdf/263

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஞா. தேவநேயப் பாவாணர்

281. உழவன் உயர்வு

'சயசயகோ குலபால' என்ற மெட்டு

பண்

-

பைரவி

ப.

உழவன் எங்கும் உயர்ந்தோனே

உலகருத்தும் உணவோனே

தளராதே உழைப்போனே

தனியுரிமை உடையோனே.

•.1

233

தாளம் - ஈரொற்று

விருந்தோம்பும் வேளாண்மை வியனுலகில் மரபாகும் மருந்தாகி நடுவூருள் மருவும்நல்ல மரமாகும்

2

(உழவன்)

ஐம்புலத்தும் இல்வாழ்வார் அனைவருக்கும் அளித்துதவி ஐந்நிலத்தும் பொருள்மாற்றே ஆற்றும் கூட்டுறவாளி (உழவன்)

3

அந்தணரின் அருந்துறவும் அரசினரின் ஆள்வினையும் வந்தபொருள் வாணிகமும் வளர்அறிவும் தான்வனையும் (உழவன்)

282. மக்கள்தொகை மிகையால் தொல்லை

பண் காப்பி

தாளம் - முன்னை

ப.

இனிநல்ல காலமே இல்லை - மக்கள் இனப்பெருக் கால்மிக எய்துவர் தொல்லை

9.1

கனிதருஞ் சோலையும் கழனியும் ஒல்லை கரந்து நகர்விரிவு காணுவ இல்லை இனிதெனப் பாலையுந் திருந்திய எல்லை

இடம்பல வுணவுகள் விளைவதற் கில்லை

(இனி)