உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 36.pdf/262

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

232

2

இசைத்தமிழ்க் கலம்பகம்

பொலங்கல் வளையல் சிலம்புடனே பலவகை யணிகளும்

கலகலெனச்

சலங்கை கொஞ்சக் கடிகையென ஒலியிரட்டிச் சலசலசலவென (ஆடு)

3

கால்வலிமையும் கைவலிமையும் மேல்வலிமையும் உண்டாகும் ஞாலம்நெடிது வாழநலமும் சாலமகிழ்வும் நன்றாகும் கேளிரு பெற்றோரும் கேளென வுற்றோரும் சீரிய மற்றோரும் கெழுதகையாய் களிமிகுவர் கிளர்தரு திருவருள் துணையுடன்

(ஆடு)

280. கற்புடைப் பெண்ணே நற் பெரும்பேறு உன்னழகைக் காண இரு கண்கள் போதாதே' என்ற மெட்டு

ரு

ப-

பெண்மணியிற் சிறந்ததொரு பேறும் இங்குண்டோ

உ. 1

மண்முழுதும் ஆளும்பெரு மாண்பு பெற்றாலும்

மனையாளுங் குலமகட்கே தினையும் ஈடாமோ.

2

தன்னையேதான் காத்துப்பின்தன் தலைவனைப் பேணித் தகைசான்ற வுரைகாத்துத் தளர்ச்சியுறாத

(பெண்)

(பெண்)

3

புகழ்விரும்பும் மனைவியுளம் பொருந்தி வரினே இகழ்வார்முன் பெருமைபெறும் ஏற்றுநடையே

(பெண்)

4

திண்ணமுறுங் கற்பரசி தீந்தமிழ் பேசித்

திறமாகக் குழந்தைகளைத் தேற்றி வளர்த்தால்

(பெண்)

5

வள்ளுவரே தெள்ளியுரை வாய்மொழி யீது எள்ளாமல் இவ்வுலகில் இன்பம் பெறுவீர்.

(பெண்)