தொடரியல்
221
(8) விளையாட்டுப் பிள்ளைகள் செய்யும் வேளாண்மை வீடு வந்து சேராது.
(9) ஏழை அழுத கண்ணீர் கூரிய வாளொக்கும்.
(10) இந்திய சமுதாயச் சீர்திருத்தம் ஆமை செல்லும் வேகத்திற் செல்கின்றது.
(11) முடவனுக்குக் கொம்பிலுள்ள தேன் கிட்டுமா?
(12) அவனுக்குக் கிடைத்தது அரசன் உண்ணும் உணவு.
கீழ்வரும் வாக்கிய
ணைகளை ஆய்க :
கலப்புவாக்கியம் : நீ விரும்பியபடி நான் செய்ய முடியாது.
தனிவாக்கியம் :
உன் விருப்பப்படி நான் செய்ய முடியாது.
கலப்புவாக்கியம் : ஒருவர் கிறித்தவராயிருந்தால் அவரைச் சைவ மடத்தில் மாணவராகச் சேர்க்க மாட்டார்கள்.
தனிவாக்கியம் : கிறித்தவரைச் சைவ மடத்தில் மாணவ ராகச் சேர்க்கமாட்டார்கள்.
கலப்புவாக்கியம் : நாடு
விடுதலையடைந்தும் பஞ்சம்
நீங்கவில்லை.
தனிவாக்கியம் : நாட்டு விடுதலைக்குப்பின்பும் பஞ்சம்
நீங்கவில்லை.
கலப்புவாக்கியம் : மழை மழை பெய்யவேண்டுமென்று மரநட்டு விழாக் கொண்டாடப்பட்டது.
தனிவாக்கியம் : மழைக்காக மரநட்டு விழாக் கொண் டாடப்பட்டது.
கலப்புவாக்கியம் : ஆங்கிலேயர் அணுக்குண்டைக் கண்டு பிடித்ததினால், சிறிது காலம் அமைதி
தனிவாக்கியம்
ஏற்பட்டது.
- ஆங்கிலேயரின் அணுக்குண்டுக் கண்டு பிடிப்பால் (அணுக்குண்டால்), சிறிது காலம் அமைதி ஏற்பட்டது.