18
முதற்றா-மொழி அல்லது தமிழாக்க விளக்கம்
லிக்குறிப்பு
சொல்
எ-டு: கூ
கூ(கூவு)
காகம்
காகா
சலக்கு
இங்குக் கூறப்பட்ட மூவியல்புகளும் மக்கள் செயலால் நேர் வனவே யன்றி, ஒலிக்குறிப்புகட்கு இயல்பாக வுரியனவல்ல. மக்கள் செயல் ஒலிக்குறிப்பின்மேல் ஏற்றிக் கூறப்பட்டதென்றே அறிக.
சில ஒலிக்குறிப்புகள் துணைவினையேற்று வினையாகும்.
எ-டு: ஓ-ஓக்களி. வீர் (வீறு) - வீரிடு (வீPடு)
(8) இருதிணை யுயிரிகளும் இயல்பாகக் கத்துவதைக் குறிக்கும் வினைச்சொற்கள் ஒலித்தல், கூப்பிடுதல் என்னும் இருபொருட்கும் ஏற்கும்.
எ-டு: கத்துதல்
=
ஒலித்தல், கூப்பிடுதல்.
கரைதல்
=
ஒலித்தல்,
கூப்பிடுதல்.
கூவுதல்
=
ஒலித்தல்,
கூப்பிடுதல்.
விளித்தல்
=
ஒலித்தல்,
கூப்பிடுதல்.
அழைத்தல்
=
கத்துதல், கூப்பிடுதல்
இவற்றுட் கரை அழை என்னுஞ் சொற்கள் அழுதலையுங் குறிக்கும்.
(9) தமிழிலக்கணத்திற் கொவ்வா ஒலிக்குறிப்புகள் இலக் கணத்திற்
கேற்ப மாற்றப்பெறும்.
எ-டு: லொட்டு - நொட்டு, லலல -தல்ல.
(10) ஒலியெழும் வினைகளைக் குறிக்கும் சொற்களில், மெல்லோசை யுணர்த்த மெல்லொலி யெழுத்துகளும் வல்லோசை யுணர்த்த வல்லொலி யெழுத்துகளும் வரும்.
எ-டு: கறி-கடி.
கறித்தல், மெல்லக் கடித்தல்.
(11) ஒலிக்குறிப்புகளைப் பின்வருமாறு ஐவகையா வகுக்க லாம்: