குறிப்பொலிக் காண்டம்
(3)
17
ஒரேயொலி வெவ்வேறு செவிக்கு வெவ்வேறு வகையா-க்
கேட்பதால், ஓர் ஒலிக்குறிப்பு வெவ்வேறு வடிவிலும் அமையலாம்.
எ-டு: குறட்டு, துறட்டு
(சலக்கு) சளக்கு, சளப்பு
(குறட்டையொலி)
(துப்பொலி)
(குழவி கதறொலி)
வீர்வீர்,வீரா வீரா
(4) சில வொலிகள் ஒரே செவிக்கு வெவ்வேறு வகையா-க்
கேட்கலாம்.
எ-டு: கு-,சு- (சொ-) =
தாளிப்பொலி.
ஓ, உவா - கக்கலொலி,
ஓ-ஓக்களி, ஓங்களி; உவா உவட்டு - உமட்டு -குமட்டு)2
(5) சில வொலிகள் வாயடைத்த நிலையில் மூக்குவழிப் பிறக்கும் மூச்சொலிகளாதலின், அவை சரியா- ஒத்தொலித்தற்குரியன. அவற்றினின்று பிறக்கும் ஒலிக்குறிப்புகளும் சொற்களும், அவற்றின் மூல வொலிகளை ஒருமருங்கே அல்லது இயன்ற அளவே ஒத்திருக்கும்.
ஒலிக்குறிப்பு
எ-டு:
முக்(கு)
மூங்
சொல்
முக்கு - முற்கு
முனங்கு
முக்குதல் கனமான பொருள்களைத் தூக்கும்போதும், முனங்குதல் கடுநோ-ப்பட்டிருக்கும்போதும், நிகழ்வன.
(6) சில வொலிக்குறிப்பினின்று பிறந்த சொற்கள், மூலவொலி யில்லாத எழுத்தையும் கொண்டிருக்கும்.
எ-டு:
ஒலிக்குறிப்பு
லுலுலுலு
சொல்
குலவை
கடைசியர் மங்கல அமங்கல வினைகளில் வாயால் நிகழ்த்தும் ஒலி
குலவை.
(7) ஒலிக்குறிப்புகளிற் சில தாமே சொல்லாவன; சில தம்மி னின்று சொற்களைப் பிறப்பிப்பன; சில இரண்டுமன்றி ஒலிக் குறிப்பாகவே நின்றுவிடுவன.
3. வழக்கில், ஓக்களித்தல் என்பது கக்கலுக்கு முந்திய வாயசைவையும், உமட்டல் (குமட்டல்) என்பது வாயசைவிற்கு முந்திய வயிற்றுணர்ச்சியையும், குறிக்கும்.