உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 13.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




16

சில

முதற்றா-மொழி அல்லது தமிழாக்க விளக்கம்

அஃறிணை யொலிக்குறிப்புகளும் சொற்களும் கடுமை

அல்லது இழிவுபற்றி மக்கள் செயலையுங் குறிக்க வரும்.

எ-டு: சள்ளெனல் = நா-போற் சினத்தல், சீறுதல் = அராப்போற் சினத்தல்.

(3) விரவுத்திணை யொலிகள்

ஒலிக்குறிப்பு

அ(ள்)

அழு

இர்

சொல்

ட் 6

கர்

கூ

பட்டு

இரை

இயம், இயம்பு, இயங்கு, இயை-இை ஏங்கு (ஏங்குதல் = ஒலித்தல்)

ஓசை

கரை

ஓதை

கூ, கூவு, கூப்பு - கூப்பிடு கூப்பீடு - கூப்பாடு;

கூச்சல், கூகை

படு (படுதல் = ஒலித்தல்)

பேரோசையைக் குறிக்கும்போது, ஓகாரமும் ஓகார உயிர்மெ-யு மாகிய இடைச்சொல்லாற் குறிப்பது வழக்கம்.

எ-டு: ஓவென்று இரைகிறது, கோவென்று அலறினான், சோ வென்று மழை பெ-கிறது.

அழை, விளி முதலிய பல ஒலிவினைச் சொற்கள் ஒலிக்குறிப் படியினவாகத் தோன்றாவிடினும், உண்மையில் ஒலிக்குறிப்படியினவே எண்ணிறந்த ஒலிக்குறிப்புச் சொற்கள் வழக்கற்று மறைந்தன.

(4) ஒலிக்குறிப்புகளைப்பற்றிக் கவனிக்க வேண்டியவை

(1) ஒலிக்குறிப்புகள் இத்துணைய வென்றும் இத்தகைய வென்றும் அறியப்படாவாறு எண்ணிறந்தன; பல்திறத்தன.

(2) ஒலிக்குறிப் பெல்லாம் இடைச்சொல்லாம். சொல்லென்று விதந்து சுட்டப்பெறுவன பெயரும் வினையுமாகிய இரண்டே. சொற்றன்மை நிரம்பிய வொலி சொல்லும், நிரம்பாவொலி ஒலிக் குறிப்பும் ஆகும். மண்ணும் மரமும் போலக் கருவிநிலைப்பட்டவை ஒலிக்குறிப்புகள்; குடமும் பெட்டியும் போலச் செ-பொருள் நிலைப் பட்டவை சொற்கள்.

3. இயங்கு

இயக்கு. இயக்குதல் ஒலிப்பித்தல், "கொடுமணி யியக்கி (திருமுருகாற்றுப் படை, 246)

""