உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 13.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




18

முதற்றா-மொழி அல்லது தமிழாக்க விளக்கம்

லிக்குறிப்பு

சொல்

எ-டு: கூ

கூ(கூவு)

காகம்

காகா

சலக்கு

இங்குக் கூறப்பட்ட மூவியல்புகளும் மக்கள் செயலால் நேர் வனவே யன்றி, ஒலிக்குறிப்புகட்கு இயல்பாக வுரியனவல்ல. மக்கள் செயல் ஒலிக்குறிப்பின்மேல் ஏற்றிக் கூறப்பட்டதென்றே அறிக.

சில ஒலிக்குறிப்புகள் துணைவினையேற்று வினையாகும்.

எ-டு: ஓ-ஓக்களி. வீர் (வீறு) - வீரிடு (வீPடு)

(8) இருதிணை யுயிரிகளும் இயல்பாகக் கத்துவதைக் குறிக்கும் வினைச்சொற்கள் ஒலித்தல், கூப்பிடுதல் என்னும் இருபொருட்கும் ஏற்கும்.

எ-டு: கத்துதல்

=

ஒலித்தல், கூப்பிடுதல்.

கரைதல்

=

ஒலித்தல்,

கூப்பிடுதல்.

கூவுதல்

=

ஒலித்தல்,

கூப்பிடுதல்.

விளித்தல்

=

ஒலித்தல்,

கூப்பிடுதல்.

அழைத்தல்

=

கத்துதல், கூப்பிடுதல்

இவற்றுட் கரை அழை என்னுஞ் சொற்கள் அழுதலையுங் குறிக்கும்.

(9) தமிழிலக்கணத்திற் கொவ்வா ஒலிக்குறிப்புகள் இலக் கணத்திற்

கேற்ப மாற்றப்பெறும்.

எ-டு: லொட்டு - நொட்டு, லலல -தல்ல.

(10) ஒலியெழும் வினைகளைக் குறிக்கும் சொற்களில், மெல்லோசை யுணர்த்த மெல்லொலி யெழுத்துகளும் வல்லோசை யுணர்த்த வல்லொலி யெழுத்துகளும் வரும்.

எ-டு: கறி-கடி.

கறித்தல், மெல்லக் கடித்தல்.

(11) ஒலிக்குறிப்புகளைப் பின்வருமாறு ஐவகையா வகுக்க லாம்: