54
இளங்குமரனார் தமிழ்வளம்
―
12
66
அறிவறை போகிய பொறியறு நெஞ்சத் (து)
இறைமுறை பிழைத்தோன் வாயிலோயே'
என வாயிற்காவலனை விளிக்கு முகத்தானே, பாண்டியன் கொடுங்கோலன் என்பதையே பறையறைந்தார் கண்ணகியார். பின்னர் அரண்மனைக்குள் சென்று வேந்தனைக் கண்டதும் அவர் நிலைகண்டு,
“நீர்வார் கண்ணை எம்முன் வந்தோய் யாரையோநீ மடக்கொடி யோய்”
என வினாவினான் நிலைமாறா மன்னன் பாண்டியன்.
‘யாரையோ?' என வினாவியவனுக்குப் புறாவுக்காகத் தன் உட லை அரிந்து தந்த அருளாளன் சிபியையும், பசுக் கன்றைக் கொன்றவன் தன் மைந்தனே என்பதையும் பாராது தேர்க்காலின் கீழ்க்கிடத்தித் தானே கொன்ற மனுவையும் கூறுமுகத்தால் அவர்கள் போற்றிய அருளையும் அறத்தையும் போற்றாத என்பதைச் சான்றுடன் காட்டினார்
கொடுங்கோலன்
கண்ணகியார்.
தான் ஏதும் தவறு செய்ததாக
தருக்கின்றிக்.
“கள்வனைக் கோறல் கடுங்கோல் அன்று வெள்வேல் கொற்றம் காண்
என்று கூறிக்,
66
99
குடிபுறம் காத்தோம்பிக் குற்றம் கடிதல் வடுவன்று வேந்தன் தொழில்”
என்று தெளிவு படுத்தினான்,
உணராத மன்னன்
- திருக். 549.
தேராமன்னா' என்று நேரடியாகவும், ‘சூழ்கழல் மன்னா’ என்னுமுகத்தால் அறிவையோ அறிஞர் அவையையோ சூழாதவன் என் று குறிப்பாகவும் கண்ணகியார் இடித்துரைத்த பின்னரும்,
“தேமொழி உரைத்தது செவ்வை நன்மொழி”
என்றான். பின்னர்ச் சிலம்பை உடைத்துக் காட்டி உண்மையை நிலை நாட்டியமை உணர்ந்ததும் ஆரியப்படை கடந்த மன்னன் அறப்படைக்கு ஆற்ற முடியாமல்,