146
இளங்குமரனார் தமிழ்வளம்
―
12
பகைவர்க்குக் கட்டி போன்ற என்றுமாம். கட்டி - கருநிறக் கட்டி எனக் கொள்ளின் அத்துணைச் சிறப்பின்றாம். காரியின் இடையே புள்ளிகள் வாய்ந்து எழிலூட்டும் அழகை மேலே (35) "சிந்தியன்ன சேடுபடு வனப்பிற் புள்ளிக் காரி”
என்பார்.
காலில்தொட்டது, கைக்கண் எடுத்தது எல்லாம் பிற ரொப்பவே செய்தான் எனினும் சுட்டியதில் அம்மவோ! இவன் ஒரு தனி வீறுகோளாளனேயாம் என்பாராய்,
“தொட்டது கழலே, கையது வேலே சுட்டியதுவும் களிறே”
என்றார். இவ்வாறு யானைக் கன்றி வீரன் வேலை ஓச்சாமை கறையடி யானைக் கல்லது
66
உறைகழிப் பறியா வேலோன்
என்னும் புறப்பாட்டால் ஏற்படும் (323). அவ் யானை பொது வாய் ஒழியாமல் வேந்தூர் யானையே யாமோ எனின் ஆம் என்க. அவன் வீழ்ந்து படின் அன்றே போர் ஒழிவது ஆகலின் வேந்தூர் யானையே என்க. இதனை,
“வேந்தூர் யானைக் கல்லது
ஏந்துவன் போலான்தன் இலங்கிலை வேலே”
என மற்றொரு புறப்பாட்டு (301) தெளிவித்தல் காண்க.
15. தானை மறம் 5
நேரிசை ஆசிரியப்பா
32. “அஞ்சுதக் கனளே; அஞ்சுதக் கனளே;
'பயறு காவலர் பந்தர் அன்ன
அலறுதலை முதியாள் அஞ்சுதக் கனளே; வெஞ்சமத்து,
என்செய் கென்னும் வேந்தற்கு
அஞ்சல் என்பதோர் களிறீன் றனளே.
1. பா.வே. யறுகா வலா
(31)
புறத். 1374