பண்டைத் தமிழகம்
அம் +காளம் (அல்லது காளி) + அம்மை = அங்காளம்மை.
49
மாரி = சாவு. காளி அழிப்புத் தெய்வமாகக் கருதப்பட்டதால் மாரியெனப்பட்டாள். மடங்கலை அவளுக்கு ஊர்தியாகக் கொண்டதும் இக் கருத்துப்பற்றியே.
பீழை - பீடை + அரி = பீடாரி (மரூஉப் புணர்ச்சி).
ஒ.நோ: பனை + அட்டு = பனாட்டு. அரித்தல் அழித்தல்.
துன்பத்திற்குக் காரணமானவளே அதை அழிப்பவளாகவுங்
கருதப்பட்டாள்.
பீடாரி-பிடாரி. பிடாரி = அம் = பிடாரம்.
கன்னி என்றும் இளையோளா யிருப்பவள். குமரி என்னும் பெயரும் இப் பொருட்டே.
கும் + அம் = குமம் - குமர் = திரட்சி, இளமை, கன்னிமை.
ம்-ர், போலி ஒ.நோ: சமம் -சமர்.
"குமரிருக்குஞ் சசிபோல்வாள்
""
=
கும் - குமி - குவி. குவிவு - குவவு = திரட்சி.
குமர் + அன் = குமரன். குமர் + இ = குமரி. குமரன் = திரண்டவன், இளைஞன், முருகன்.
(குற்றா. தருமசாமி. 47)
குமரி - திரண்டவள், இளையள், கன்னி, காளி. ஒ.நோ : இளவட்டம் = இளைஞன். வட்டம் = உருட்சி.
E. vergin, from Gk. orago, to swell.
கும்மை - கொம்மை = திரட்சி. ஒ.நோ: குட்டு - கொட்டு.
குமரன் - குமாரன்(வ.). குமரி - குமாரி (வ.) - குமாரத்தி.
பகவதி (பகவன் என்பதின் பெண்பால்) கன்னி என்னும் பெயர்கள் பின்னர்க் கூறப்படும்.
"வளிதருஞ் செல்வனை வாழ்த்தவு மியைவதோ
(கலித். 15)
என்பதால், சூரியனும் பாலைநிலத்தில் வணங்கப்பட்டமை அறியப்படும். சுடரோடிரத்தல்' என்னும் கோவைத் துறையும் இதை யுணர்த்தும்.