பண்டைத் தமிழகம்
53
சேம்பர் அகராதியில் A.S. feond, pr. p. of feon, to hate என்று கூறப்பட்டுள்ளது; feon என்பதற்கு அஞ்சு என்பதே மூலப் பொருளா யிருக்கலாம்.
பேய் = அச்சம். அச்சத்தைத் தரும் ஆவி பேய் எனப்பட்டது. பேய்கள் அகாலமாய் இறந்தோரின் ஆவிகளென்றும், அவற்றிற் பல வகையுண்டென்றும் சொல்லப்படுகிறது.
பேய்களை மனவுறுதியாற் கட்டுப்படுத்தி, அவற்றாற் பயன் கொள்வது மந்திரம். மந்திரம், மாந்திரிகம், மாந்திரிகன் என்பன முறையே மந்திரமொழிக்கும் வினைக்கும் வினைஞனுக் கும் வழங்கும் பெயர்கள். மந்திரம் வாய்மொழி என்னும் பெயர்களுள், முன்னது கடவுள் பேய் இரண்டையும் பற்றியது; பின்னது கடவுளையே பற்றியது.
பேய்களுக்குத் தலைவி காளியாதலால், அவளை வழிபடுதல் ஐந்திணைக்கும் பொதுவும் மாந்திரிகர்க்குச் சிறப்பும் ஆயிற்று. மாந்திரிகள் அவளை வாலை (= இளையள், கன்னி) என்பர்.
கட்டுவைப்பித்தல், வேலன் வெறியாட்டு, தேவராளன், தேவராட்டி என்பவை மாந்திரிகம் பற்றிய பழங் குறிப்புகளாகும்.
பேய்களில் ஒருவகை பூதம். பூதம் பெருஞ்செயல் செயவல்லது. காவிரிப்பூம்பட்டினத்திலிருந்த சதுக்கப்பூதத்தைப் பற்றிச் சிலப்பதிகாரத்திற் காண்க.
பூதவணக்கம் பண்டைக்காலத்தில் சிறப்பாயிருந் ததினாலேயே, சிவபெருமான் பூதகணங்களுக்குத் தலைவர்
எனப்பட்டார்.
பூதம் என்னும் பெயர் பெருமைப் பொருளது. பொதுபொது (இரட்டைக் கிளவி), பொதுக்கு, பொந்து என்னும் சொற்களை நோக்குக. பொந்து - பொந்தன் - மொந்தன். ஒ.நோ. உ-ஊ., பொது- (புது) - பூது. இரும்பூது - இறும்பூது. பூது + அம் பூதம். பேய் களிற் பெரியது பூதம். உலகின் ஐம்பெருங் கருவிப் பொருள்கள் ஐம்பூதம் எனப்பட்டன.
=
இந்தியா, எகிபது, சீனம் ஆகிய நாடுகள் பண்டைக் காலத்தில் மாந்திரிகத்திற் சிறந்திருந்தன.