206
உயர்தரக் கட்டுரை இலக்கணம்
என்பது, 'சுரிகையைக் கட்டி வாயைக் கடித்துக்கொண்டு' என்று மாற்றப் படல்வேண்டும்.
என்பது,
சுரையாழ அம்மி மிதப்ப வரையனைய
யானைக்கு நீத்து முயற்கு நிலையென்ப
சுரைமிதப்ப அம்மியாழ வரையனைய
யானைக்குநிலை முயற்கு நீத்தென்ப
என்று மாற்றடப்படல் வேண்டும்.
தாழ்ந்த உணர்வினரா-த் தாளுடைந்து தண்டூன்றித் தளர்வார் தாமும் சூழ்ந்த வினையாக்கை சுடவிளிந்து
நாற்கதியிற் சுழல்வார் தாமும்
மூழ்ந்த பிணிநலிய முன்செ-த
வினையென்றே முனிவார் தாமும்
வாழ்ந்த பொழுதினே வானெ-து
நெறிமுன்னி முயலா தாரே
என்பதின், ஈற்றடி முதலடியாயும், மூன்றாமடி இரண்டாமடியாயும், இரண்டாமடி மூன்றாமடியாயும், முதலடி ஈற்றடியாயும் மாற்றப்படல் வேண்டும்.
3. அணிநடை
அணியானது செ-யுட்குச் சிறப்பாதலால், பல கூற்றுகள் செ-யுளில் அணிநடையா- அமைந்திருக்கும். அவற்றை இயல்பான முறையில் வரைதல் வேண்டும்.
எ-டு: "கரங்கள்மீச் சுமந்து செல்லும்”
என்பது, 'கைகளைத் தலைமேற் குவித்துச் செல்லும்' என்று வரையப் பெறல் வேண்டும்.
எ-டு: பஞ்சிதன் சொல்லாப் பனுவ லிழையாகச்
செஞ்சொற் புலவனே சேயிழையா - எஞ்சாத கையேவா யாகக் கதிரே மதியாக
மையிலா நூன்முடியு மாறு.
என்பது ஓர் உருவகம். இதை,