கட்டுரையியல்
எங்கண் உளரோ எந்நிலை யினரோ? என்றே யிரங்கி யிருந்துயில் மூழ்கினன் விடிந்ததும் வண்டி மிதிலை சேர்ந்தது கவிரா யன்தன் களிமனை புகுந்ததும் பழஞ்சோ றுண்ணப் பகர்ந்தன னாயினும் வண்டிக் காரன் உண்டி மறுத்தனன் வாடகை யும்பின் வாங்க மறுத்தனன் விடையே வேண்டினன் காரணம் வினவ வெங்க எப்ப நாயக்கன் வழியேன்
ஊழ்வினை யாலித் தாழ்நிலை யடையினும் கொடுத்தகை வாங்குங் குணமெமக் கில்லை இன்றுனக் குதவிய தென்பெரும் பேறே என்றனன் வண்டி யியக்கினன் சென்றான் கண்துளி கொளக்கவி ராயன்
பண்புறு வழிமுறைப் பாங்கை நினைந்தே.
2. பள்ளிக் கணக்குப் புள்ளிக் குதவாது
இலக்கணந் தருக்கம் நல்ல இசையொடு கணியம் நோ-கள் விலக்கிடு மருந்திவ் வைந்து வித்தையொன் றொன்றே கற்றுத் துலக்குறும் உலகப் போங்கு துளியதும் அறியா ஐவர்
புலக்கலை காணத் தக்க புரவலர் பரிசை நாடி,
215
(1)
வடபுலம் நீங்கித் தெற்கில் வளமுறு வேலூர் ஆங்கண் திடமிக அரையன் முன்னே திறமைக ளெல்லாங் காட்ட விடவரு விருப்பின் மன்னன் வியந்துபா ராட்டும் போது
மடவர்இவ் வுலக வாழ்வில் மன்றவென் றமைச்சன் சொன்னான்.
(2)
யென்றே இறைமகன் வினவ இன்னே
அத்தனை அழிந்துள்ளது பேருஞ் சென்றூண் அருந்தியே மீளச்
சொன்னால்
மெ-த்திறங் காண்பா யென்று மேதகை யமைச்சன் கூற உத்தர வாகி யன்றே உண்ணுதற் கவருஞ் சென்றார்.
(3)
தங்கிய மனைக்குச் சென்று தம்முணாச் சமைத்தற் கென்றே அங்கவர் ஒவ்வோர் வேலை ஆற்றிட இசையில் வல்லோன் வெங்கழி நெருப்பை மூட்டி வேவுறும் உலையு மேற்றிப்
பொங்கியே கொதித்தல் கண்டு பொருந்திடத் தாளம் போட்டு
(4)