8
இளங்குமரனார் தமிழ் வளம் 22
ஓசையைச் 'சப்தம்' என்றும்,
சுவையை 'ருசி' என்றும்,
மணத்தை 'வாசனை' என்றும்,
தித்திப்பு, இனிப்பை 'மதுரம்' என்றும்,
தொடுதல், உறுதலை ‘ஸ்பர்சம்' என்றும்
கல்வியை 'வித்தை' என்றும்,
தண்ணீர்,சோறு,உணவு என்பனவற்றை 'ஜலம்' அந்நம்
ஆகாரம் என்றும்,
ஆடையை ‘வஸ்திரம்' என்றும்,
கட்டாயம் என்பதை 'அவஸ்யம்' என்றும்,
தாய், தந்தை, மகன், மகள், உறவினரை 'மாதா', 'பிதா', புத்ரன், புத்ரி,பந்துக்கள் என்றும்,
துன்பம், கேடு, குடும்பம் என்பவற்றைக் கஷ்டம், நஷ்டம் சம்ஸாரம் என்றும்,
தலைமுழுக்கு,
வழிபாடு, இளைப்பு, தூக்கம் முதலியவைகளை 'ஸ்நாநம்', 'பூஜை', 'ஆயாசம்' நித்திரை என்றும்,
முயற்சி, ஊழ்வினை, உயிர், சிவம், கடவுள் என்பவற்றைப் பிரயத்நம், விதி,ஆத்மா, ஈசன், பிரமம் என்றும்,
நினைத்தல், எண்ணல், சொல்லல் என்பவற்றை 'ஞாபகம்', 'பாவநை', வசனித்தல் என்றும்,
தூய தமிழ்ச் சொற்களை ஒழித்து வடசொற்களைக் கொண்டு வந்து புகுத்தித் தனித்தமிழ்ச் சொற்களை வழங்காமல் தொலைப்பதுதானா நமது அருமைச் செந்தமிழ் மொழியை வளர்ப்பது? அறிவுடையீர்! கூறுமின்கள்!'
தனித்தமிழ் இயக்கம் கண்ட அடிகளார் செயலைக் கலிகாலக் கொடுமை என்று வெறுத்துப் பழித்தாரும் இருந்தனர். அவர்களை நோக்கி, "பண்டு தொடங்கிப் புனிதமாய் ஓங்கி நிற்கும் தம் தனித்தமிழ்த் தாயைப் பிறமொழிச் சொற்கள் என்னும் கோடரியினுள் நுழைந்து கொண்டு, இத் தமிழ்ப் புதல்வர் வெட்டிச் சாய்க்க முயல்வது தான் கலிகாலக் கொடுமை!