62
3)
4)
5)
6)
7)
8)
9)
10)
228
இளங்குமரனார் தமிழ் வளம் - 22
பழந்தமிழ்க் குடிமக்கள் (தீண்டாதார்) எல்லோரையும் தூய்மையாகத் திருக்கோயில்களிற் சென்று
வழிபாடாற்றப் பொதுமக்களும் ம்
தலைவர்களும் இடம் தரல் வேண்டும்.
கோயில்
கோயில்களில் பொது மாதர் திருப்பணி செய்தல்
கூடாது.
வேண்டப்படாதனவும் பொருட்செலவு மிக்கனவும் சமய உண்மைக்கு முரண்பட்டனவும் அறிவுக்குப் பொருத்தம் அற்றனவும் ஆகிய திருவிழாக்களையும் சடங்குகளையும் திருக்கோயில்களிலே செய்தல் முற்றும் கூடாது. தூயதும் வேண்டப்படுவதுமான சடங்குத் திருவிழாவும் குறைந்த செலவிலே செய்தல் வேண்டும்.
சாரதா சட்டத்தை உடனே செயன்முறைக்குக் கொணர்தல் வேண்டும்.
கைம்பெண்ணைத்
தாலியறுத்தல், மொட்டை யடித்தல், வெண்புடவையுடுத்தல், பட்டினி போடல் முதலியவை நூல்களிற் கூறியிருப்பினும் வெறுக்கத் தக்க இச் செயல்களை நீக்குதல் வேண்டும். கைம் பெண் மணம் முற்காலத்திலும் இருந்திருப்பதாலும் நூல்களில் ஒப்புக்கொண்டிருப்பதாலும்
அதனைச்
முறைக்குக் கொணர்தல் வேண்டும்.
சாதிக் கலப்பு மணம் வரவேற்கத் தக்கது.
செயன்
தமிழ்நாட்டுப் பல்கலைக் கழகங்களில் தமிழுக்குத் தலைமை தருதல் வேண்டும்.
தமிழைத் தனிப்பாடமாக பி.ஏ. ஆனர்சு வகுப்புக்கு ஏற்படுத்தல் வேண்டும்.
இவை பொதுநிலைக் கழக விழாவில் நிறைவேற்றப் பட்டன என்றால் இவற்றைக் கொணர்ந்தவர் எவர்? அடிகளாரே அல்லரோ! இக் கொள்கைகள்தாமே பொது நிலைக் கழகம் அஃதென்பதை வெளிப்படுத்த வல்லன வல்லவோ! சீர்திருத்தம் சீர்த்திருத்தம் எனக் கொடி கட்டிப் பறந்தார் சீர்திருத்தக் கொள்கைகளையெல்லாம் அடக்கமாக- அமைவாக-காட்டிய அடிகளார் 'பெருநிலை' சிவநெறியர்க் கெல்லாம் உண்டாகியிருந்தால், அச் சமயம் எத்தகு வழிகாட்டியாக அமைந்திருக்கும், அஃதில்லாமை.