இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
104
இளங்குமரனார் தமிழ் வளம்
மற்றோர் உரைமறுப்பும் மன்னும் பதினவரை
வற்றார்மறைமலை யார்.
9. பல்கலைச் செல்வர்
தோற்றும் தொலையுணர்வு தூய மனவசியம் ஆற்றும் அறிதுயில் ஆர்வாழ்வு - மாற்றும் மறுமை மறைமலையார் மாணுங் கலைகள் பொறுமை யுடன்கற்ற போக்கு.
ம
228
10. தனித்தமிழ் தந்தையர்
மூவா யிரமாண்டு மோதும் வடமொழியாற் சாவாந் தகைநின்ற தண்டமிழை - மேவாக் குமரித் தனிநிலைக்குக் கொண்டுவந்த அப்பர் அமரர் மறைமலை யார்.
(அமரர் = போர் மறவர்)
மறைமலையடிகள்
-பாமாலை 1-2.
நூற்றாண்டு
விழா மலர்
பொழிவுத் தலைப்பு, மறைமலையடிகளின் ஆராய்ச்சித் திறன். 'ஆதலால் மறைமலையடிகளைப் பற்றிய ஆய்வும் தோய்வும் உடையவர்களும், அவரால் மதித்தும் பாராட்டியும் போற்றப் பட்டவர்களுமாகிய இவர்கள் உரையும் பாட்டும் கண்ட அளவில், ஆராய்ச்சிக்குச் செல்வோம்.