உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 22.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

104

இளங்குமரனார் தமிழ் வளம்

மற்றோர் உரைமறுப்பும் மன்னும் பதினவரை

வற்றார்மறைமலை யார்.

9. பல்கலைச் செல்வர்

தோற்றும் தொலையுணர்வு தூய மனவசியம் ஆற்றும் அறிதுயில் ஆர்வாழ்வு - மாற்றும் மறுமை மறைமலையார் மாணுங் கலைகள் பொறுமை யுடன்கற்ற போக்கு.

228

10. தனித்தமிழ் தந்தையர்

மூவா யிரமாண்டு மோதும் வடமொழியாற் சாவாந் தகைநின்ற தண்டமிழை - மேவாக் குமரித் தனிநிலைக்குக் கொண்டுவந்த அப்பர் அமரர் மறைமலை யார்.

(அமரர் = போர் மறவர்)

மறைமலையடிகள்

-பாமாலை 1-2.

நூற்றாண்டு

விழா மலர்

பொழிவுத் தலைப்பு, மறைமலையடிகளின் ஆராய்ச்சித் திறன். 'ஆதலால் மறைமலையடிகளைப் பற்றிய ஆய்வும் தோய்வும் உடையவர்களும், அவரால் மதித்தும் பாராட்டியும் போற்றப் பட்டவர்களுமாகிய இவர்கள் உரையும் பாட்டும் கண்ட அளவில், ஆராய்ச்சிக்குச் செல்வோம்.