தமிழகச் சமயங்கள் - சமணம்
-
முருகு விரிகமலம்
மருவு சினகரன்
திருவ டிகள்தொழுமின் அருகு மலமகல.
(34)
துங்கக் கனகச் சோதி வளாகத்
தங்கப் பெருநூல் ஆதியை யாளும் செங்கட் சினவேள் சேவடி சேர்வார்
தங்கட் கமரும் தண்கடன் நாடே.
(35)
வஞ்சிப்பா
மந்தாநில மருங்கசைப்ப
வெண்சாமரை புடைபெயர்தரச்
செந்தாமரை நாண்மலர்மிசை
எனவாங்கு
இனிதி னொதுங்கிய விறைவனை
மனமொழி மெய்களின் வணங்குது மகிழ்ந்தே.
(36)
பணையெருத்தி னிணையரிமா னணையேந்தத்
துணையில்லாத் துறவுநெறிக் கிறைவனாகி
எயினடுவ ணினிதிருந் தெல்லோர்க்கும்
பயில்படுவினை பத்திமையாற் செப்பினோன்
புணையெனத்
திருவுறு திருந்தடி திசைதொழ
விரிவுறு நாற்கதி வீடுநனி யெளிதே.
(37)
கோழியுங் கூவின குக்கில் குரல்காட்டுந்
தாழியி னீலத் தடங்கணீர் போதுமினோ
ஆழிசூழ் வையத் தறிவனடியேத்திக் கூழை நனையக் குடைந்து குரைபுனல் ஊழியு மன்னுவா மென்றேலோ ரெம்பாவாய்
(38)
அருந்தவர்கட் காதியா யைய நீங்கி
ஔவியந்தீர்ந் தவிரொளிசே ராக்கை யெய்தி யிருந்திரட்டை யினமருப்பின் யானை யூர்தி
யீரைஞ்ஞூ றெழினாட்டத் திமையோ னேத்த
215