இந்தியால் விளையுங் கேடு
25
இனி, செய்தித்தாள்களிலும் கட்டுரைகளிலும் பாடப்பொத்தகங் களிலும் செய்யுள்களிலும் இசைப்பாட்டுகளிலும் ஏராளமாகவும் தாராளமாகவும் இந்திச் சொற்களைப் புகுத்தி, அவற்றையே ஆட்சிச் சான்றாகவுங் காட்டுவர். வையாபுரிகளும் மதிப்புரை வழங்குவர்.
L
இங்ஙனம் மறைமலையடிகளின் மாபெருந் தனித்தமிழ்த் தொண்டும், அவர்களைப் பின்பற்றித் தமிழைத் அருமுயற்சியும் அடியொடு பாழாக்கப்பெறும்.
தூய்தாக்கும்
வேண்டாத அயற்சொற்களை நூற்றுக்கணக்காகவும் ஆயிரக் கணக்காகவும் சென்னைப் ப.க.க.த.அகரமுதலியிற் சேர்த்த தினாலேயே. இத்தாலியாவிலிருந்து வந்த பாசானி என்னும் பாரசீக மொழிப் பண்டாரகர், இவ் வாண்டு நிகழ்ந்த 2ஆம் உலகத் தமிழ்ப் பழிப்பு மாநாட்டில், தமிழ் பாரசீக மொழியினின்று இருநூறு சொற்களைக் கடன்கொண்டுள்ளது என்று அச்சிட்ட கட்டுரை படித்துச் சென்றதும் என்க.
6. இந்திமூலப் புணர்ப்பு
வ
இந்தி தமிழ்நாட்டில் வழக்கூன்றியபின், தென்சொல்லினின்று திரிந்த வடசொற்கள் எங்ஙனம் அத் தென்சொற்கு மூலமெனத் தலை கீழாகக் காட்டப்படுகின்றனவோ, அங்ஙனமே தென்சொல்லினின்று திரிந்த இந்திச் சொற்களும் தென்சொற்கு மூலமாகக் காட்டப்படும்.
எ டு :
இந்திச்சொல் தென்சொல்
இந்திச்சொல்
தென்சொல்
அரே
அடே
தண்
தண்டா
இத்னா
இத்தனை
பூல்
தண் பூ
உப்பர்
உம்பர்
மார்
மாறு(அடி)
ஒண்ட்
உதடு
வங்க்
வங்கு(வளை)
காட்
கட்டில்
ஸரக்
சருக்கு, சறுக்கு
சபா
சவை
ஹோ
ஆகு
ஜோட்
சோடி.சுவடி
(அழகுபடுத்து)
என் ‘தமிழ் வரலாறு' என்னும்
நூலிற் காட்டப்பட்டுள்ள
ஏனை யிந்திச் சொற்களும் இங்ஙனமே தென்சொற்கு மூலமாகக் காட்டப்படும்.
தமிழிலிருந்து வடதிரவிடஞ் சென்று, அதினின்று பிராகிருத வழியாகவும் வடமொழி வழியாகவும் இந்தியில் வந்து வழங்குஞ்