இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
இசையரங்கு இன்னிசைக் கோவை
24. ஸ்தமிழ்ப்பற்று
பண் - 'சிந்துபைரவி’
ப.
57
தாளம்
முன்னை
பற்றிருந் தாலும் போதும் பைந்தமிழ்மேல்
உ. 1
கற்றவரே தமிழைக் காட்டிக் கொடுத்து நின்றார் கல்லாத பேரே தமிழ்க் காவல ராகி வென்றார்
2
(பற்றி)
சின்னச் சாமி யிளைஞன் செந்தமிழ் கற்ற துண்டோ அன்னைத் தமிழைக் காக்க அழலிற் குளித்தா னன்றோ
(பற்றி)
3
கோடிக் கணக்கிற் செல்வம் குவித்தார் கொடாத கண்டர் ஓடியாடித் தொகுத்தே உதவினார் ஏழைத் தொண்டர்
4
(பற்றி)
மாண்டபின் னருந்தமிழ் மாணவ னென்ன அன்பு பூண்டனர் போப்பையரும் பொறிக்கக் கல்லறை முன்பு
(பற்றி)
5
காசை யிழக்கவேண்டா கடுஞ்சிறை செல்ல வேண்டா பேசும் தமிழின் தூய்மை பேணியே காக்க வேண்டும்
6
நற்றமிழ் மாண்பை யெல்லாம் நாடி யறியா தோரும் பெற்றவள் போலே யின்று பிழைக்க வுதவும் பாரும்
(பற்றி)
(பற்றி)