உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 35.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




இசையரங்கு இன்னிசைக் கோவை

24. ஸ்தமிழ்ப்பற்று

பண் - 'சிந்துபைரவி’

ப.

57

தாளம்

முன்னை

பற்றிருந் தாலும் போதும் பைந்தமிழ்மேல்

உ. 1

கற்றவரே தமிழைக் காட்டிக் கொடுத்து நின்றார் கல்லாத பேரே தமிழ்க் காவல ராகி வென்றார்

2

(பற்றி)

சின்னச் சாமி யிளைஞன் செந்தமிழ் கற்ற துண்டோ அன்னைத் தமிழைக் காக்க அழலிற் குளித்தா னன்றோ

(பற்றி)

3

கோடிக் கணக்கிற் செல்வம் குவித்தார் கொடாத கண்டர் ஓடியாடித் தொகுத்தே உதவினார் ஏழைத் தொண்டர்

4

(பற்றி)

மாண்டபின் னருந்தமிழ் மாணவ னென்ன அன்பு பூண்டனர் போப்பையரும் பொறிக்கக் கல்லறை முன்பு

(பற்றி)

5

காசை யிழக்கவேண்டா கடுஞ்சிறை செல்ல வேண்டா பேசும் தமிழின் தூய்மை பேணியே காக்க வேண்டும்

6

நற்றமிழ் மாண்பை யெல்லாம் நாடி யறியா தோரும் பெற்றவள் போலே யின்று பிழைக்க வுதவும் பாரும்

(பற்றி)

(பற்றி)