உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 15.pdf/160

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

160

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 15

வெவ்விட மமுதென விளங்குங் கண்ணினார்க்

கெவ்விட முடம்பினி லிழிக்கத் தக்கன அவ்விட மாடவர்க் கமிர்த மாதலால் உய்விடம் யாதினி யுரைக்கற் பாலையே.

பெற்றவை பெற்றுழி யருந்திப் பின்னரும் மற்றுமோ ரிடவயின் வயிறு தானிறைத்

ஒற்றைமா மதிக்குடை யரசு முண்டரோ.

திற்றைநாள் கழிந்தன மென்று கண்படூஉம்

புழுமலக் குடருள் மூழ்கிப் புலால்கமழ் வாயிற் றேய்த்து

விழுமவை குழவி யென்றும் விளங்கிய காளை யென்றும் பழுநிய பிறவு மாகிப் பல்பெயர் தரித்த பொல்லாக்

குழுவினை யின்ப மாகக் கொள்வாரோ குருடு தீர்ந்தார்.

1

2

3

அருந்திய குறையிற் றுன்ப மாங்கவை நிறையிற் றுன்பம் பொருந்துநோய் பொறுத்தல் துன்பம் பொருந்திய போகத் துன்பம் மருந்தினுக் குஞற்றல் துன்ப மற்றவை யருந்தல் துன்பம் இருந்தவா றிருத்தல் துன்பம் யார்கொலோ துன்ப மில்லார். 4

வாழ்கின்ற மக்களுநம் வழிநின்றா ரெனவுள்ளந் தாழ்கின்றார் தாழ்கில்லார் தமநில்லா வானக்கால் ஆழ்கின்ற குழிநோக்கி யாதார மொன்றின்றி வீழ்கின்றார் மெய்யதா மெய்தாங்க வல்லரோ.

6

வல்லென்ற சொல்லும் புகழ்வாய்மை வழீஇய சொல்லும் இல்லென்ற சொல்லு மிலனாகலின் யாவர் மாட்டுஞ் சொல்லுங் குறையின் மையிற்சோரரு மின்மையாலே கொல்லென்ற சொல்லு முரைகற்றிலன் கொற்ற வேலான்.

மன்னன் மேவு கோயில்மேரு மான மற்றி மண்ணெலா மென்ன லாய வூரிடத் திலங்கு மாளி கைக்குலம் பொன்னின் மேரு வின்புறம் பொருப்பு நேர வப்புறந் துன்னு நேமி வெற்பையென்பர் சூழ் மதிற் பரப்பையே.

ஆசை யல்குற் பெரியாரை யருளு மிடையுஞ் சிறியாரைக் கூசு மொழியும் புருவமும் குடில மாகி யிருப்பாரை வாசக் குழலு மலர்க்கண்ணு மானமுங் கரிய மடவாரைப் பூசல் பெருக்க வல்லாரைப் பொருந்தல் வாழி மடநெஞ்சே.

5

LO

6

7

00