உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 16.pdf/264

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

264

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 16

“கலித்தொகைப் பதிப்புரை எழுதிய பின்னர் மேற்கண்ட நான்கு நூல்கள் எனக்கும் அகப்பட்டன. ஐந்திணை விஷயத்தில் யான்கூறிய கூற்றுச் சரியன்றென்று ஒத்துக்கொள்வதுமன்றி ஆசாரியரவர்கட்கு என் வந்தனமுங் கூறுகின்றேன். பிறர் சில ரொப்பக் கோவையைத் திருச்சிற்றம் பலக்கோவை என்று கொள்ளாது யான் சொல்லியது போல ஆசாரக்கோவை என்று இவர்கள் உரையிட்டது சாலவும் பொருத்த முடையதேயாம்.

"முப்பால் தெய்வப் புலமைத் திருவள்ளுவ நாயனாரது பொய்யாமொழித் தமிழ் வேதமாகிய திருக்குறளல்ல வென்பதற்கு யான் கூறிய நியாயங்களை முற்றச் சீர்தூக்கி ஆராயாது ‘ஆலும் வேலும் பல்லுக்குறுதி நாலுமிரண்டுஞ் சொல்லுக்குறுதி' என்னும் பிற்றை நாண்மொழியைச் சங்கத்தார் காலத்து முதுமொழிபோற் கொண்டது ஆசாரியார்பால் ஒரு தவறென்றே இன்னும் வற்புறுத்து கின்றேன். கோவை திருக்கோவை யாகாது ஆசாரக் கோவை யானாற்போல முப்பாலும் நாயனார் தமிழ்வேதமாகாது நமது கைக்கு இன்னும் அகப்படாத பின்னொரு சிறு நூலேயாதல் வேண்டுமென்பது என் துணிவு மாத்திரமன்று. இது விஷயத்தில் யான் கண்டு பேசிய பல மடாதிபதிகள் வித்துவான்கட்கும் இஃதொப்பென்றறிக.

66

ஃதெழுதிய பின்னர், ஸ்ரீ த. கனகசுந்தரம் பிள்ளையவர்கள் தமக்கு அகப்பட்டதோர் மிகப் பழைய கீழ்க்கணக்குச் சுவடியில், 'நாலடி நான்மணி' என்னுஞ் செய்யுள் அதிகஞ் சிதைவுபட்டுக் கிடப்பதில், ஐந்திணை என்பதற்கு ஐந்திணையைம்பது, ஐந்திணை எழுபது, திணைமொழி யைம்பது, திணைமாலை நூற்றைம்பது என்னும் நான்குமே உரையிற் குறிக்கப்பட்டிருக்கின்றன வென்றும் முப்பால் என்பதன் உரை நாயனார் திருக்குறளை ஒருவாற்றானுஞ் சுட்டாது முப்பாலென்றே கூறப்பட்டிருக்கிற தென்றும், கைந்நிலை என்பது அப்பெயரான் உரையோடு உள்ளதோர் தனி நூலாகக் கண்டிருக்கிற தென்றும் எழுதியறிவித்தனர். இஃது என் கூற்றை நன்கு வற்புறுத்து கின்றது. இதனால், 'நானாற்ப தைந்திணை' என்றதில் நாலென்னும் அடையை நாற்பது ஐந்திணை என்றும் இரண்டனோடும் ஒட்டி நானாற்பது, நாலைந்திணை என்று கோடல் வேண்டுமென்றும், ஐந்திணை யான் கூறியவாறு ஒரு நூலுமன்று, ஆசாரியாரவர்கள் கூறுமாறு ஐந்து நூலுமன்று ஐந்திணைப் பொருள் உணர்த்திய நான்கு நூல்களென்று கொள்ளத் தக்கதென்றுஞ் சொல்ல ஏதுவாகின்றது.