128
"செயப்படு பொருளைச் செய்தது போலத் தொழிற்படக் கிளத்தலும் வழக்கியல் மரபே."
தமிழ் வளம்
(731)
என்னும், தொல்காப்பிய நூற்பாக்களாலும், அவற்றிலுள்ள "செயப்படு பொருள்" என்னும் சொல்லாட்சியாலும், அறியப்படும்.
ஆயினும், தமிழில் உண்மையானபடி செயப்பாட்டுவினையே இல்லை யென்று கால்டுவெலார் தவறாகக் கொண்டார். இதற்குத் தமிழிற் செயப்பாட்டு வினையின் அருகிய வழக்கும் அதன் பல்வேறு வகையுமே கரணியம் (காரணம்).
செயப்பாட்டுவினைப் பொருளைப் பெரும்பாலும் செய்வினை வடிவாற் குறிப்பதே, தொன்றுதொட்டுவரும் தமிழ் வழக்காம்.
-
எ-டு : புலி கொன்ற மான் (=புலியாற் கொல்லப்பட்ட மான்). தச்சன் செய்த பெட்டி (=தச்சனாற் செய்யப்பட்ட பெட்டி). ஆங்கிலத்திலும் பல பிற மொழிகளிலும் செயப்பாட்டுவினை வடிவம் பெரும்பாலும் ஒன்றே. தமிழிலோ, அவ் வினை நிகழ்கால வினையெச்சத்தோடு கூடிய துணைவினை, முதனிலைத் தொழிற் பெய ரோடு கூடிய துணைவினை, என்னும் மூவடிவு கொள்ளும்.
செய்வினை
இனி, சில செயல்கள் பற்றி, எழுவாயும் அதன் வினையுமின்றிச் செயப்படு பொருளையே செய்ததுபோலச் கொடுத்துக் கூறுவதும், தமிழ் வழக்காம். இதனையே
"செயப்படு பொருளைச் பொருளைச் செய்தது போலத் தொழிற்படக் கிளத்தலும் வழக்கியன் மரபே"
என்றார் தொல்காப்பியர்.
எ. டு: திண்ணை மெழுகிற்று, கலங் கழுவிற்று.
தூங்கி
இதனை, இப்போதுதான் வந்திற்று, சற்று முன்புதான் எழுந்திற்று, எனத் தன்மை யொருமை வினையைப் படர்க்கை யொன் றன்பால் வினையாகக் கூறும் தமிழ் வழக்கிற் கொப்பாகக் கொள்ளினும் குற்றமின்று வந்திற்று, எழுந்திற்று என்பன, கொச்சை நடையில் வந்திச்சு எழுந்திச்சு என வழங்கும்.
ஆங்கிலத்திற் செயப்பாட்டுவினையின் பெயராயுள்ள passive என்னும் சொல்லின் அடியான pat என்னும் இலத்தீன் வேர்ச் சொல்லே, படு என்னும் தமிழ்ச் சொல்லை ஒலியாலும் பொருளாலும் ஒத்திருப்பது கவனிக்கத்தக்கது.
உரிச்சொல்
பெயர்ச்சொல், வினைச்சொல், பெயர்க்கும் வினைக்கும் உறுப்பாக வரும் இடைச்சொல் என இலக்கணவகைச் சொல் உண்மையில் மூன்றே. பெயரையும் வினையையும் தழுவிவரும் சொல்லெல்லாம் பெயரெச்ச மாகவும் வினையெச்ச மாகவும் நின்று, பெயருள்ளும் வினையுள்ளும் அடங்கும்.