குடிலன்:
ஐந்தாம் களம்
இடம் : குடிலன் மனை. காலம்: மாலை.
(குடிலன் உலாவ.)
(இணைக்குறள் ஆசிரியப்பா)
(தனிமொழி)
புத்தியே சகல சக்தியும்! இதுவரை
நினைத்தவை யனைத்தும் நிறைவே றினவே. உட்பகை மூட்டிப் பெட்புற் றிருந்த
மதுரையாம் முதுநகர் விடுத்து மன்னனைப் 5 புதியதோர் பதிக்குக் கொணர்ந்து புரிசையுங் கட்டுவித் தோம்நம் இட்டமாம் வகையே நாமே யரசும் நாமே யாவும்;
10
15
மன்னவன் நமது நிழலின் மறைந்தான்;
பிடித்தாற் கற்றை விட்டாற் கூளம்;
மதுரையை நெல்லை இனிமேல் வணங்குமோ?
இதுதனக் கிறைவன் இறக்கில் யாரே
அரச ராகுவர்? -
-
(மௌனம்)
புரவலன் கிளைஞர் புரிசையைக் கேட்கினும்
வெருளுவர். வெல்லார். ஆயினும் -
முழுதும் நம்மையே தொழும்வகை யிலையோ? கருவியுங் காலமும் அறியில் அரியதென்?
ஆ! ஆ! அயர்த்தோம் அயர்த்தோம்!
மயக்கம் மனோன்மணி கொண்டதை முற்றும்
அயர்த்தோம்! ஆ! ஆ! ஆயிழை யொருவனைக்
பெட்பு - விருப்பம். 'பிடித்தால் கற்றை விட்டால் கூளம்' பழமொழி. வெருளுவர் - அஞ்சுவார்கள். அயர்த்தோம் - மறந்தோம். பற்றல் - பற்றுதல்.