பதிப்பு : மனோன்மணியம் - நாடகம்
195 கனியுங் கருணையே கனியாக் காய்த்து, தருமநா டென்னும் ஒருநா மங்கொள் திருவாழ் கோடாஞ் சேரதே சத்துப்
புருடோத் தமனெனும் பொருவிலாப் புருடன் நீங்கி லில்லை நினது
200 பூங்கொடி படரப் பாங்காந் தருவே.
ஜீவ:
சுந்தர:
89
17
நல்லது! தேவரீர் சொல்லிய படியே,
இடுக்கண் களைந்த இறைவ!
நடத்துவன் யோசனை பண்ணி நன்றே.
18
யோசனை வேண்டிய தன்று. நடேசன்
ஜீவ:
சுந்தர:
ஜீவ:
205 என்றுள னொருவன். ஏவில்,
சென்றவன் முடிப்பன் மன்றல் சிறக்கவே.
கெடலறு சூழ்ச்சிக் குடிலனோ டுசாவி ... (எழுந்து)
அரகர! குருபர! கிருபா நிதியே!
காவாய் காவலன் ஈன்ற
210 பாவையை நீயே காவாய் பசுபதே !
(சுந்தரமுனிவர் போக)
தொழுதோம்; தொழுதோம். செவிலி! யவ்வறைக்
கெழுதுங் கருவிகள் கொணராய்
பழுதிலாக் குடிலற் குணர்த்துவம் பரிந்தே.
19
20
(ஜீவகன் முதலியோர் போக)
முதல் அங்கம்: நான்காம் களம் முற்றிற்று.
திருவாழ்கோடு - திருவாங்கூர் இராச்சியம். இது சேரநாட்டைச் சேர்ந்தது. நீங்கில் - தவிர்ந்தால். இடுக்கண் - துன்பம். களைந்த – நீக்கிய. ஏவில் - ஏவினால். பரிந்து - விரைந்து.
-