மொழிநூற் கட்டுரைகள்
7
போனமையாலும், அதன் பின்னரும் இயற்கையாகவும் செயற்கையாகவும் தமிழுக்கு நேர்ந்துள்ள பல இன்னல்களின் விளைவாகவும், பல தமிழ்ச் சொற்களும் சொல் வடிவுகளும் இன்று தமிழல்லாத திரவிட மொழிகளிலேயே வழங்கிவரக் காண்கின்றோம்.
எ-கா :
சொல்
(தெலுங்கு) எச்சரிக்கை
சொல் வடிவு
நன் (நான் என்பதன் வேற்றுமையடி)
இற்றைத் தமிழிலில்லாது பிற திரவிட மொழிகளிற் சிறப்பாக வழங்கும் தென்சொற்கள், திசைச் சொல்லின் பாற்படும்; சொல்வடிவுகள் குடியேற்றப் பாதுகாப்பு (Colonical Preservation) என்னும் நெறிமுறைக் கெடுத்துக் காட்டாம். திரவிட மொழிகளுள், தமிழை வளம்படுத்தற்கும் தமிழ் இலக்கணச் சொல்லுறுப்புக்களின் பண்டை நிலையை அறிதற்கும் மலையாளம்போல்
உதவுவது பிறிதொன்றுமில்லை.
எ-கா :
(1) கின்று என்னும் நிகழ்கால இடைநிலை
எ-கா:
6
သ
கின்று என்னும் நிகழ்கால இடைநிலை, குந்து-வந்து என்று மலையாளத் திலும், (குந்நு)-குந்-உந்-ந் என்று தமிழிலும் திரியும்.
செய்கின்று-செய்குந்நு-செய்யுந்நு. (மலை.)
செய்கின்றான்-செய்குத் செய்யுநன்-செய்நன்-(தமிழ்)
தமிழ்) செய்குந்நான்-செய்யுந்நான்-
‘மகிழ்நன்’, ‘வாழ்நன்' (வாணன்) முதலியன இங்ஙனம் திரிந்தவையே. (2) செய்யாதே என்னும் எதிர்மறை ஏவல்வினை
எ-கா :
செய்யாதே என்னும் எதிர்மறை ஏவல், மலையாளத்தில் செய்யருது என்னும் வடிவு கொண்டு நிற்கும். 'செய்யருது' என்பது 'செய்யரிது என்பதன் திரிபு. 'செய்யரிது' என்பது முறையே, செய்ய முடியாது, செய்யக்கூடாது என்னும் பொருளது, அருது (அரிது) என்பது மலையாளத்தில் தனிவினையாகவும் வரும்.
ஈ ஆள்க்கு வேறே பணி அருது=இவ் ஆட்கு வேறுவேலை கூடாது. ‘ஆர்க்கானும் கொடுக்கும் போழ் அருதென்னு விலக்கருது.' (பழமொழி) (3) யகரமெய்யீற்று இறந்தகால வினையெச்சம்
தமிழ் வினைமுற்றுக்கள் முதற்காலத்தில் எச்ச வடிவில் வழங்கிப் பின்பு முற்றீறு புணர்ந்தனவாதலின், அவற்றைப் பகுக்கும்போதும் எச்சமும் ஈறுமாகவே பகுத்தல் வேண்டும்.
7